
புதன், 1 அக்டோபர், 2008
பரங்கிப்பேட்டையில் பெருநாள் தொழுகை
பரங்கிப்பேட்டையில் பெருநாள் தொழுகை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் காலை 8 மணிக்கு நடைபெற்றது. சரியான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இட வசதியால் இந்த ஆண்டு நெருக்கடி தவிர்க்கப்பட்டது. வழக்கத்தைவிட இவ்வாண்டில் பெண்கள் மிக அதிகமானோர் பங்குப்பெற்றனர். பெண்கள் தொழுகைக்காக ஷாதி மஹாலில் இட வசதி செய்யப்பட்டிருந்தது. தொழுகைக்குப் பிறகு அனைவரும் ஆரத்தழுவி தங்களுக்கிடையே மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

மின்(வெட்டு) வாரியத்தின் பெருநாள் பரிசு
வழக்கமாக மின்(வெட்டு) வாரியத்தின் மின்வெட்டு தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை இருக்கின்ற நிலையில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு சிறப்பு மின் வெட்டாக காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணிவரை வழக்கத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.
பெருநாள் சிறப்பு பக்கம் - பித்ரா வினியோகம்

