
வியாழன், 28 ஜனவரி, 2010
பரங்கிப்பேட்டை அன்னை மகளிர் சுய உதவிக் குழுவுக்கு பரிசுத் தொகை - மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
கடலூர், ஜன. 26:
கடலூரில் செவ்வாய்க்கிழமை நடந்த குடியரசு தினவிழாவில் ரூ. 24.27 லட்சத்துக்கான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ். நடராஜன் வழங்கினார்.
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த குடியரசு தின விழாவுக்கு வந்த மாவட்ட ஆட்சியரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் வரவேற்றார்.
பின்னர் தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் ஏற்றி வைத்தார்.
போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் பார்வையிட்டார்.
வருவாய்த்துறை சார்பில் 51 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, விதவை மகள் திருமண உதவித் திட்டத்தில் 10 பேருக்கு தலா ரூ. 20 ஆயிரம் உதவித் தொகை உள்ளிட்ட ரூ. 24.27 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
சிறப்பாகப் பணிபுரிந்த தலைமைக் காவலர்கள் 43 பேருக்கு பதக்கங்களை ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெறத் தேர்வு செய்யப்பட்ட காட்டுமன்னார்கோவில் ஒன்றியம், மாவட்ட அளவில் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட கம்மாபுரம் சிறுமலர், பரங்கிப்பேட்டை அன்னை, கடலூர் மூகாம்பிகை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் பரிசுத் தொகைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
பள்ளி மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
கடலூர் நகராட்சித் தலைவர் து. தங்கராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி: தினமணி இணைய நாளிதழ்
செவ்வாய், 26 ஜனவரி, 2010
செவ்வாய், 5 ஜனவரி, 2010
மாறி வரும் பரங்கிப்பேட்டை அடையாளங்கள் - II








திங்கள், 4 ஜனவரி, 2010
உண்மையான புத்தாண்டு கொண்டாட்டம்

வருடப்பிறப்பு என்றால் நம்மில் பலருக்கு கொண்டாட்டம்தான் நினைவு வரும். சமூகத்தின் ஒதுக்கப்பட்ட, கவனிக்கப்படாத மக்களை பற்றிய நினைவு அப்போது வருவது பக்குவமுள்ள மனங்களுக்குத்தான் கைவரும் ஒரு விஷயமாகும். நமதூர் லயன்ஸ் கிளப் என்றழைக்கப்படும் அரிமா சங்கம் இந்த வருட பிறப்பின் முதல் நாளன்று செய்த காரியம் என்ன தெரியுமா? சாலிகண்டு தைக்கால் அருகே உள்ள அரசு முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து அவர்களுடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்ததுதான்.