


நேற்றைய பதிவு நம்மில் சலனங்களை ஏற்படுத்தி இருந்தாலும் இல்லாமல் போனாலும் மழை அதன் பணியை செய்ய, மிகப்பெரும் திண்டாட்டமாகி போய்விட்டது அந்த குடியிருப்பு மக்களுக்கு.. பயந்தது போன்றே கிட்டத்தட்ட முழு குடியிருப்பும் மூழ்கிபோய் விட்டது என்றே சொல்லலாம். ஷாதி மஹாலுக்கு பின்புறமுள்ள கோட்டாறு தற்போது மனை பிரிவு போட்டு விற்கப்பட்டு விட்டதால் அங்கு சமபடுத்தப்பட்ட நிலத்தினால் வேறு வடிகால் இன்றி நீர் முழுதும் இந்த குடியிருப்பு நோக்கி பாய,... ஒரு வழியாக முத்துராஜா அவர்களின் முன்முயற்சியால் வாலிபர்கள் இணைந்து மணலை வெட்டி ஒழுங்கு படுத்தினார்கள். அங்கு வந்த மக்தூம் நானா அவர்கள் களத்தில் இறங்கி நீண்ட நேரம் நின்று வேலை வாங்கினார்கள். ஜமாஅத் தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் நிலைமையை நேரில் வந்திருந்து பார்வையிட்டார். தொகுதி எம் எல் ஏ ஊரில் இருந்தும் வரவில்லை. அங்கிருந்த வாலிபர்களின் உடனடி நிதி திரட்டலில் நவாப்ஜான் நானா, (ஐநூறு) சுமையா ஹாஜா பக்ருதீன் நானா (ஐநூறு), மக்தூம் நானா (ஐநூறு), மற்றும் அய்மன் (இரநூற்றி ஐம்பது) கிடைத்தது. அதை கொண்டு ஒவ்வொரு வீட்டிற்கும் அரை லிட்டர் பால் வாங்கி கொடுக்கப்பட்டது. ஏற்கனவே ஜமாஅத், குடியிருப்புவாசிகளில் சிலரை ஷாதி மஹாலில் குடியேற்றியும், தவ்ஹீத் நானா அவர்களின் முன்முயற்சியால் இரவு உணவு (பரோட்டா) ஏற்பாடு செய்யபட்டும் இருந்தது. ஏழைகளும் இந்த மழைக்காலத்தை நல்லபடியாக கழித்திட துஆ செய்வோம்.
