பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இணைச் செயலர் செல்வராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சதீஷ்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.இணைச் செயலர்கள் சீனுவாசன், இப்ராஹிம், மக்கள் நலப் பணியாளர் சங்கத் தலைவர் ராஜவேல், ஊராட்சி உதவியாளர் சங்கத் தலைவர் மதியழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக