சனி, 27 டிசம்பர், 2008
பரங்கிப்பேட்டையில் இண்டெர்நெட் மற்றும் வங்கி சேவைகள் பாதிப்பு
குமரக் கோயில் தெருவில் இயங்கி வந்த பி.எஸ்.என்.எல். எக்ஸ்ச்சேஞ் அலுவலகம் சந்தை தோப்பு அருகில் உள்ள அதன் சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது. இதனால் பி.எஸ்.என்.எல்லின் பிராட்பேண்ட் சேவை கடந்த 6 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏ.டி.ஏம். சேவை மட்டுமின்றி அதன் மற்ற சேவைகளும் பரங்கிப்பேட்டையில் நேற்றுவரை தடைபெற்றிருந்தது. அவசரநிலை கருதி வங்கி சேவைக்கு மட்டும் இண்டர்நெட் வசதியை நேற்று வழங்கப்பட்டது. ஆனால் வங்கி தவிர்த்து மற்ற யாருக்கும் இணைப்பை தராமல் இன்று, நாளை என்று மாற்றி மாற்றி கூறுவதால் அதன் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அலுவலகம் மற்றும் இணைப்பு கட்டிடம் மாற்று பணி நடைபெறுகிறது. இந்த சிரமத்தை நாங்களும் உணர்கிறோம். இன்று மாலைக்குள் எல்லா பிரச்சினையும் சரிசெய்யப்பட்டு வழக்கமான சேவைகள் தொடரும் என்று கூறினர்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...