
நன்றி;

நன்றி;
பரங்கிப்பேட்டை பெண்கள் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற ஒழுக்க சீர்கேடுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக கண்டண ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.நகர செயலாளர் G.வல்லரசன் தலைமை தாங்கினார்,கடலூர் மாவட்ட செயலாளர் திரு,T.மணி வாசகம் கண்டண உரையாற்றினார்.நகர செயலாளர் பேசுகையில், ஆசிரியர்களை மாணவர்கள் மாதா பிதா குரு தெய்வம் எனசொல்வார்கள் ஆனால் அந்த ஆசிரியர்களோ, மாணவிகள் முன்னால் அருவறுக்கதக்க முறையில் சண்டையிட்டுள்ளார்கள். இது மிகவும் கண்டிக்கதக்கது இந்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதுமட்டுமில்லாமல், அனைத்து ஆண் ஆசிரியர்களையும் பணியிடைமாற்றம் செய்யவேண்டுமென்றார்,இல்லையெனில்இந்திய கம்யூனிஸ்ட் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துமென்றார்.மாவட்ட செயலாளர் T. மணிவாசகம் பேசுகையில் இந்த பெண்கள் மேல்நிலைபள்ளியை பொருத்தவரை பெண் ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கபடவேண்டும், ஆசிரியர் தாழ்வு மனப்பான்மையால் ஒருவரையொருவர் சண்டையிட்டு கொண்டிருந்த போது நீண்டகாலமாக சண்டையை கண்டுக்கொள்ளாத தலைமை ஆசிரியர் மீது கல்வி இலாகா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் சமுக பொறுப்பை உணர்ந்து மற்றவர்கள் மதிக்க தக்கமுறையில் தமது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவேண்டும் என்றார்.
இன்று மீராப்பள்ளி வளாகத்தில் பதவியேற்ற முஹம்மது யூனுஸூக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சியின் போது MYPNO சார்பாக வாழ்த்து மடல் வழங்கப்பட்டது. இதனைத்


வாழ்த்து செய்தியாக அவர் குறிப்பிட்டதாவது. "முஹம்மது யூனூஸ் வெற்றி பெறுவார் என்று தான் முன்பே நம்பியதாகவும்,இன்னும் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்த்ததாகவும் ,ஜனநாயக முறையில் பெற்ற வெற்றியானது மிகப் பெரிய வெற்றி என்றும் கூறிய அவர் பரங்கிபேட்டை முஸ்லிம்கள் தொடர்ந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்று தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டார்."

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர்கள்,மற்றும் துனை ஆய்வாளர்கள் வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு மாற்றப்பட்டனர்.



இன்றைய தேர்தலில் இன்ஸ்பெக்டர் இராம பாண்டியன் தலைமையில் 2 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 20 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏ.எஸ்.பி. நரேந்திர நாயர் இரு முறை களத்திற்கு வந்து நிலைமைகளை மேற்பார்வையிட்டுச் சென்றார். இந்த தேர்தலுக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு என்றெல்லாம் பேசியவர்கள், கடைசியில் அவர்களின் பணியை பாரட்டிச் சென்றினர். இடையிடையே ஏற்பட்ட கள்ள ஓட்டுகள் உட்பட்ட பல சலசலப்புகள் காவல் துறையின் தலையீட்டால் மட்டுமே முடிவுக்கு வந்தது.










இன்று நடைபெற்று வரும், ஜமாஅத் பொதுத் தேர்தலில் ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கிடையே... நீண்ட வரிசைகள், பலத்த போலீஸ் பாதுகாப்புகள், முடியாத நிலையிலும் முதியவர்கள்-ஊனமுற்றவர்கள் என்று மிகுந்த பரபரப்புகளுடன் ஓட்டு பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்கள் வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். சட்டமன்ற-பாராளுமன்ற தேர்தலை மிஞ்சிவிடும் அளவிற்கு பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது. தேர்தல் நடைபெற்று வரும் ஷாதி மஹால் வளாகத்தின் வெளியே எங்கு நோக்கினும் இளைஞர் கூட்டம் அலை மோதுகிறது.



மதுரையில், தினமலர் நாளிதழ், வேலம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி ஆகியவை இணைந்து, பிப். 14 ல் பிளஸ் 2 மாணவர்களுக்கான குவிஸ் போட்டியை நடத்த உள்ளன.
அறிவியல், விளையாட்டு, வரலாறு, கலை, கலாசாரம், பொழுதுபோக்கு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். போட்டியில் ஒரு பள்ளியில் இருந்து மேல்நிலை வகுப்பு மாணவர்கள் 2 பேர் தலைமை ஆசிரியரிடம் சான்றிதழ் பெற்று கலந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்புவோர் அவரவர் பள்ளியில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
பங்கேற்கும் மாணவர்களுக்கு பயணப்படி கிடையாது. தொலைதூர மாணவர்கள் தங்க வசதி செய்து தரப்படும். போட்டியில் வெல்லும் மாணவர்களுக்கு முதல்பரிசு 10 ஆயிரம் ரூபாய், 2ம் பரிசு 7 ஆயிரம், 3ம் பரிசு 5 ஆயிரம் வழங்கப்படும். பள்ளிகளுக்கு கேடயம், பார்வையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
குவிஸ் போட்டிகளை திருச்சி ‘தி குவிஸ் சோசியேட்’ நிறுவனம் நடத்துகிறது. மேலும் விவரங்களுக்கு, ‘ஒருங்கிணைப்பாளர் பி.நெல்சன்ராஜா (98432 79083), எம்.ஜெயராஜ் (99432 06996) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை கல்லூரி தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம், முதல்வர் சுரேஷ்குமார் தெரிவித்தனர்.
செய்தி: http://www.kalvimalar.com/tamil/ScrollNewsDetails.asp?id=1207
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அடுத்த மாதம் பிளஸ் 2 தேர்வு எழுத, அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதி வரை விண்ணப்பிக்காமல், தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்து ‘சிறப்பு அனுமதி’ (தத்கல்) திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தனித்தேர்வர்கள், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு ஆதாரமாக, இத்துறையால் அனுப்பப்பட்ட குறிப்பாணையை விண்ணப்ப மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள், பிப். 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை சென்னை கல்லூரி சாலையில் உள்ள அரசுத்தேர்வுகள் இயக்ககம், அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து அரசுத்தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், புதுச்சேரியில் உள்ள இணை இயக்குனர் அலுவலகம், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் லுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
செய்தி: http://www.kalvimalar.com/tamil/ScrollNewsDetails.asp?id=1210







