தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைபெய்துவருகிறது.
இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக்கடலிலுருந்து மத்திய மேற்குவங்க கடலை நோக்கி நகர்வதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் அளவு குறைந்ததோடு ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.
தற்போது வங்கக்கடலில் புதிய புயல்சின்னம் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டில் இருந்து 1200 கிலோமீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு தினங்களுக்கு சூறைக் காற்றுடன், பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் ஆந்திராவில் நாளை முதல் கண மழை பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
by:
பந்தர்.அலி ஆபிதீன்.
வெள்ளி, 5 நவம்பர், 2010
இந்த குறைந்தக்காற்றழுத்த தாழ்வு நிலைக்கு ஜல்... என்று பெயரிடப்பட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்!:
கருத்துரையிடுக