புதன், 24 ஏப்ரல், 2013

லயன்ஸ் கிளப் - மாவட்ட ஜமாஅத் இணைந்து நடத்திய மருத்துவ முகாம் (படங்கள்)










பரங்கிப்பேட்டை அரிமா சங்கமும் (லயன்ஸ்  கிளப்)  கடலூர் மாவட்ட ஐக்கிய  ஜமாஅத்தும் இணைந்து மாபெரும் மருத்துவ முகாம்  ஒன்றை இன்று மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில்  நடத்தின. (துண்டு பிரசுரத்தில் முஹம்மதியா ஷாதிமஹால் என்று குறிப்பிடப்பட்டிருந்தது).

பரங்கிப்பேட்டை நகர அரிமா சங்கத் தலைவரும் , மாவட்ட ஜமாஅத்தின் தலைவருமான பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் அரிமா M.S..முஹம்மது யூனுஸ் வரவேற்புரையாற்றினார். அரிமா  334-A3 மாவட்ட ஆளுநர் R.M.  சுவேதகுமார் முகாமைத் தொடங்கி வைத்தார்.

“என்னை-யும் கவனியுங்களேன்” – கும்மத்பள்ளி குளம்


பரங்கிப்பேட்டை: மாசற்ற காற்று,  நீர் வளம் இவைகளே, வருங்கால சமுதாயத்திற்கு நாம் இட்டும் செல்லும் சொத்துக்கள் என்று சுற்றுப்புற சூழலுக்காகவும், நீர் வளத்திற்காகவும் குரல்கள் வலுவாக ஒலிக்க தொடங்கி பக்கீர் மாலிமார் பள்ளி குளம் தூர் அகற்றல்  போன்ற நல்ல பல மாறுதல்கள் முன்னெடுத்து செல்லப்படும் வேளையில்,  கும்மத்பள்ளி குளம் தாமரை செடிகளால் சூழப்பட்டு பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது.

 புதிய பள்ளிவாசல் கட்டிடம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினர்,  குளத்தின் பரமாரிப்பு பணியிலும் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு

மழை நீர் வடிகால் புதுப்பிக்கும் பணி!

பரங்கிப்பேட்டை: சின்னத்தெரு – காஜியார் தெரு – சாணார முடுக்குப் பகுதிகளிலிருந்து வெளியாகும் மழை நீர்  அல்குரைசி தர்கா சந்து வழியாக அமைக்கப்பட்ட வடிகால் மூலம் வெளியாகி வந்தது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததினால் கழிவு நீர் ஓடும் வடிகாலாக மாறிவி;டது. மேலும் இவ்வடிகால் அமைக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆனதால் மோசமான நிலையில் காணப்பட்டது, இந்நிலையில் புதியதாக வடிகால் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றது.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...