ஞாயிறு, 12 அக்டோபர், 2008
உங்களை நம்பியும் சில உயிர்கள் உள்ளன
இந்த படங்களை பாருங்கள்
நேற்று வரை நாம் பார்த்து பழகிய சகோதரர்கள் கண நேர தவறில் சிதைந்து உருக்குலைந்துபோய்... இறந்து போன சகோதரர்களின் பெற்றோர்களின் அழுகையும் நண்பர்களின் கேவலும் நீங்கள் கேட்டுஇருந்தால் தெரியும்...
விபத்திர்க்கான காரணம் எதுவாக இருந்தாலும் ....
# வேகம் என்பது விவேகமல்ல
# நடக்காத வரை தான் எதுவும் நலம் நடந்துவிட்ட பிறகு இழப்பு இழப்புதான்
# மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தற்கொலைக்கு சமம்.
# (தூரப்பயணத்தின் போது) தலைகவசம் என்பது உயிர்கவசம்.
# அரசின் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிப்போம்.
இது எதுவும் நமது மனதில் ஏறவில்லையா?
உங்கள் அழகிய குழ்ந்தைகளின் முகத்தை, மனைவி, பெற்றோர்களின் முகத்தை மனதில் கொண்டு வந்து நிறுத்திவிட்டு பிறகு போடுங்கள் உங்களின் முதல் கியரை...
ஏனெனில் உங்களை நம்பியும் சில உயிர்கள் உள்ளன
இறைவனின் அருட்கொடை

பூமியையும் அதில் வாழும் உயிர்களையும் உயிர்ப்பிக்கும் அழகிய மழையின் மூலம் தன் அளவற்ற கருணையை சுவைக்கும் படி செய்த அல்லாஹுவிர்க்கே புகழனைத்தும்.
மின்சாரம் எனும் அருட்கொடையை சீரியல்களில் மூழ்கியும் டிவிடிக்களில் படம் பார்த்தும் அதிரவிட்டும் வீணடித்து இன்று அதனால் அவதியுறும் நாம் - விரைவில் வரவிருக்கும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு இந்த மழையை எப்படி திட்டமிட்டு சேமித்து வைக்க போகிறோம் என்பதை யோசிப்போமா?
புகைப்பட நன்றி கு.நிஜாமுதின் (ஜி.என்) அவர்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...