கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடலோரப் பகுதி கிராமங்களில் செவ்வாய்க்கிழமை சுனாமி முன்னெச்சரிக்கையால் இப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு அருகில் திங்கள்கிழமை நள்ளிரவு கடலுக்கடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையொட்டி மத்திய அரசால் இந்தியாவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுனாமி முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையொட்டி சிதம்பரத்தை அடுத்த கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதியில் பில்லுமேடு, எம்ஜிஆர் திட்டு உள்ளிட்டப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை சங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை ஊதப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதால் கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதிகள் மீண்டும் வழக்கமான நிலைக்கு திரும்பின, என்று இன்றைய தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...