ஆனால் இந்த புதிய ஆண்டிற்கு, எவ்வித அடையாளமும் காணப்படாமல் இருந்தது. சஞ்சீவிராயர் முனையில் மட்டும் (முன்னால்) மியான் கடையில் லேசான அலங்கார விளக்கோடு Happy New Year என்கிற வாழ்த்து வாசகத்தோடு கூட்டமே இன்றி, இரவு 12 மணி வரை வெறிச்சோடியே காணப்பட்டது.
01-01-2009; 00:00 சரியாக துவங்கியவுடன் ஊரின் பக்கவாட்டுகளிலிருந்து பக்காவாக ஒலித்தது வெடியும் வேட்டு சத்தங்களும். பல்ஸரும், அப்பாச்சிகளும் சரக்-புரக் என்று சிமெண்ட் சாலைகளில் இனம்புரியாத ஓசைகளை எழுப்பியவாறு சோழாவரம் ரேஸ் ஒன்றை நடத்திவிட்டு சென்றது.
அதன் பிறகு மியான் கடையில் டீ விற்பனையும் சூடு பிடித்துக்கொண்டது.
இதனிடையே நள்ளிரவு 2 மணி வரை ஊரின் பல முக்கிய வீதிகளில் இளைஞர் பட்டாளம் ஒன்று கார் ஒன்றில் அதன் உள்ளேயும் மேற்கூரையிலும் உட்கார்ந்தவாறு அதிரடி இசை முழங்க, கைத்தட்டல்கள் மற்றும் வெடிகளை வெடித்தவாறு தூக்கத்தில் இருந்தவர்களை அதிர்ச்சியூட்டிவிட்டு சென்றது.
இவர்களை புகைபடமெடுக்க முயன்ற தருணத்தில் சுதாகரித்து கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டது.