பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…!
பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-2026 தேர்தல் நடைபெற்று வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது
இதற்கு முன்பு நடைபெற்ற மூன்று தேர்தலும் பரங்கிப்பேட்டையை சேர்ந்த முன்னாள் அரசு அதிகாரி தலைமையில் தேர்தல் கமிட்டி அமைக்கப்பட்டு தேர்தல் நடந்தேரியது
முதல்முறையாக பரங்கிப்பேட்டையில் இருக்கும் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் ஒருங்கிணைக்கப்பட்டு அவர்களில் ஏழு பேர் தேர்தல் கமிட்டியாக செயல்பட இத்தேர்தல் முன்னெடுக்கப்பட்டது.
தேர்தல் கமிட்டி
1. A. மெய்தீன் அப்துல் காதர் (பசுமை ஹாஜி) - தேர்தல் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்
2. S. குலாம் முஹம்மது கவுஸ்
3. N. A. முஹம்மது இல்யாஸ்
4. S. முஹம்மது அலிகான்
5. M. G. M. ஆகிஷா மாலிமார்
6. H. அப்துஸ்ஸமத் ரஷாதி
7. K. அன்வர் ஹசன்
21ம் நூற்றாண்டின் முதலாம் காலாண்டில் நடைபெறும் இத்தேர்தலை காலத்திற்கேற்ப மெருகேற்றி நவீன தேர்தல் நடைமுறைகளை தன்னார்வலர்களின் பங்களிப்புடன் தேர்தல் கமிட்டியினர் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
1) ஜமாத் தேர்தலில் வாக்களிப்பவர்கள் குறித்த தனி Database உருவாக்கி அதை வாக்காளர்கள் ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ளும்படி அறிவித்தனர். இந்த டேட்டா பேஸ் உருவாக்கப்பட்டதன் மூலம் இன்னும் பல நன்மைகள் எதிர்காலத்தில் நம் சமுதாயத்திற்கு கிடைக்கும்.
2) ஜமாத் தேர்தலுக்கான தனி வெப் லிங்க் உருவாக்கப்பட்டு வாக்கு நிலவரங்களை வெளிநாட்டில் இருப்பவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் அருமையான ஏற்பாடு செய்திருந்தனர்.
3) இந்த தேர்தலில் வாக்கு செலுத்த வரும் ஒவ்வொருவரின் அடையாள ஆவணமும் Database உடன் verify செய்யப்பட்டு QR CODE உருவாக்கப்பட்டு அதன் பின்னரே வாக்களிக்கும் நடைமுறையை வெற்றிகரமாக தேர்தல் கமிட்டியினர் செயல்படுத்தி உள்ளனர்.
இத்தகைய நவீன முறைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோதும் வெளிநாடு வாழ் பரங்கிப்பேட்டை NRI களுக்கு வாக்குரிமை அளிக்கப்படாதது குறித்து NRI கள் வருத்தம் அடைந்ததாக தெரிகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக