பின்னர் சிதம்பரம் பள்ளிவாசல் நிர்வாகி இப்ராம்சா (எ) மூசா, கேப்டன் M.ஹமீது அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், பதவி என்பது சுமை. இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை காணப்படுகிறது. உணவில் எப்படி பல வகைகள் இருந்தால் தான் சுவையாக இருக்குமோ, அதுப்போலவே வேற்றுமையில் ஒற்றுமையாக இருந்தால் தான் சிறப்பு. மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி கலவரம் உண்டு பண்ணி ஏராளமான சிறுபான்மையினர் உயிரிழக்க காரணமாக இருக்கின்றனர். எல்லா மதங்களும் எப்படி வாழ வேண்டும் என்று சொல்கிறது. நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், அன்பை வளர்க்க வேண்டும்.
இப்பகுதி இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக ஜமாஅத் சார்பில் கம்ப்யூட்டர் மையம் தொடங்க வேண்டும். அரசின் சார்பில் தொடங்கிட முந்தைய ஆட்சியரிடம் கேட்டு கொண்டிருந்தேன். இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் என்ற குறளுக்கேற்ப டாக்டர் நூர் முஹம்மதிற்கு இந்த பொறுப்பு வந்துள்ளது என்றார்.
ஏற்புரை வழங்கிய டாக்டர் நூர் முஹம்மது, இன்று கேப்டன் ஹமீது அப்துல் காதர் ஜமாஅத்திற்கு நிதியுதவி வழங்கினார். நம்மில் நிறைய பேர் வசதியாக இருக்கிறார்கள், அவர்களும் ஜமாஅத்திற்கு நிதி வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். விரைவில் பொதுக்குழுவில் எல்லா விவரங்களையும் தெரிவிக்கிறேன் என்றார். நம் சுயமரியாதைகளை நாம் இழக்காமல் இருக்க வேண்டும். மாற்று மத சகோதரர்களுடன் சுமுகமாக பழகி நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஜமாஅத்தில் ஒற்றுமைக்கு மட்டுமே முன்னுரிமை. பைத்துல்மால் ஏழை மக்களின் நிதி, அவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வது தான் குறிக்கோள்.
கல்விக்குழு ஒன்று அமைக்கப்படும் ஏழை மக்களுக்கு மட்டுமின்றி நடுத்தர மக்களுக்கும் கல்விக்காக உதவி செய்யப்படும். இளைஞர்கள் இந்த நாட்டின் தூண்கள், அவர் வேறு பாதையில் சென்று விடாமல் இருக்க இளைஞர் குழு அமைக்கப்படும். அரசின் திட்டங்கள் நிறைய இருக்கிறது, அதை மக்களுக்கு பெற்று தர வழிவகை செய்யப்படும். ஷரீஅத் குழு ஒன்று அமைக்கப்படும் அது நூற்றுக்கு நூறு ஷரீஅத் சட்டப்படி செயல்படும். எவ்வித பரிந்துரைக்களுக்கும் அங்கு இடமில்லை என்று கூறி தனது ஏற்புரையை நிறைவு செய்தார்.
இறுதியில் ஜமாஅத் துணைத்தலைவர் O.A.W.பாவாஜான் நன்றியுரையாற்றினார்.
களத்தொகுப்பு: MGF / ஹம்துன் அப்பாஸ்

























