பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012 10 கருத்துரைகள்!


பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் S.நூர் முஹம்மது பதவியேற்கும் நிகழ்வு இன்று காலை பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் தொடங்கியது மீராப்பள்ளி இமாம் மவ்லவி அஹமது கபீர் காஷிபி அவர்கள் கிராஅத் ஓதி கூட்டத்தினை துவக்கி வைத்தார்.
மர்ஹபா கல்வி அறக்கட்டளை நிர்வாகி Z.பஜ்லுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மவ்லவி M.H.கபீர் அஹமது மதனி பேசுகையில் ஒற்றுமையை வலிறுத்தினார்.
பின்னர் டாக்டர் S.நூர் முஹம்மது-விற்கு வழக்கறிஞர் M.E.செய்யது அன்சாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து வழக்கறிஞர் அன்சாரி பேசுகையில், ஜாதி - மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த ஜமாஅத் பாடுபட்டு வருகின்றது. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்பில் வேலை வாய்ப்பிலும், ஒப்பந்த பணிகளிலும் இந்த இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட தலைவர் பாடுபட வேண்டும். ரியல் எஸ்டேட்டில் உரிமை பெறாமல் பல இடங்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே அவ்விஷயத்திலும் தலைவர் கவனம் செலுத்த வேண்டும். ஜமாஅத் சொத்து என்பது பொதுச் சொத்து ஏழை - எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயர உறுதுணையாக இருக்கவேண்டும் என்றார்.
பின்னர் சிதம்பரம் பள்ளிவாசல் நிர்வாகி இப்ராம்சா (எ) மூசா, கேப்டன் M.ஹமீது அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
வாழ்த்துரை வழங்கிய சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் K.பாலகிருஷ்ணன், "பல்வேறு திருமண நிகழ்ச்சிகளின் காரணமாக தாமதமாக வர நேரிட்டமைக்கு முதலில் வருத்தம் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், பதவி என்பது சுமை. இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை காணப்படுகிறது. உணவில் எப்படி பல வகைகள் இருந்தால் தான் சுவையாக இருக்குமோ, அதுப்போலவே வேற்றுமையில் ஒற்றுமையாக இருந்தால் தான் சிறப்பு. மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி கலவரம் உண்டு பண்ணி ஏராளமான சிறுபான்மையினர் உயிரிழக்க காரணமாக இருக்கின்றனர். எல்லா மதங்களும் எப்படி வாழ வேண்டும் என்று சொல்கிறது. நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், அன்பை வளர்க்க வேண்டும்.

பரங்கிப்பேட்டையில் நாலு வீதிகளில் மாடி வீடுகள் இருக்கிறது. இப்பகுதியில் தானே புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட போது தான் தெரிந்தது. இருப்பதற்கு கூட இடமில்லாத ஏழை மக்கள் இருக்கின்றனர். இஸ்லாமியர்கள் மேட்டு குடி அல்ல அது தவறான பார்வை, மிகப்பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் தினக்கூலிகளாக பீடி சுற்றும் தொழிலாளிகளாக இருக்கின்றனர். இஸ்லாமியர்கள் பற்றி தவறான எண்ணம் இருக்கிறது. நீதிபதி சச்சார் கமிட்டி மட்டுமே இஸ்லாமியர்களின் உண்மை நிலையினை சொல்கிறது.

இப்பகுதி இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக ஜமாஅத் சார்பில் கம்ப்யூட்டர் மையம் தொடங்க வேண்டும். அரசின் சார்பில் தொடங்கிட முந்தைய ஆட்சியரிடம் கேட்டு கொண்டிருந்தேன். இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் என்ற குறளுக்கேற்ப டாக்டர் நூர் முஹம்மதிற்கு இந்த பொறுப்பு வந்துள்ளது என்றார்.

ஏற்புரை வழங்கிய டாக்டர் நூர் முஹம்மது, இன்று கேப்டன் ஹமீது அப்துல் காதர் ஜமாஅத்திற்கு நிதியுதவி வழங்கினார். நம்மில் நிறைய பேர் வசதியாக இருக்கிறார்கள், அவர்களும் ஜமாஅத்திற்கு நிதி வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். விரைவில் பொதுக்குழுவில் எல்லா விவரங்களையும் தெரிவிக்கிறேன் என்றார். நம் சுயமரியாதைகளை நாம் இழக்காமல் இருக்க வேண்டும். மாற்று மத சகோதரர்களுடன் சுமுகமாக பழகி நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஜமாஅத்தில் ஒற்றுமைக்கு மட்டுமே முன்னுரிமை. பைத்துல்மால் ஏழை மக்களின் நிதி, அவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வது தான் குறிக்கோள்.

கல்விக்குழு ஒன்று அமைக்கப்படும் ஏழை மக்களுக்கு மட்டுமின்றி நடுத்தர மக்களுக்கும் கல்விக்காக உதவி செய்யப்படும். இளைஞர்கள் இந்த நாட்டின் தூண்கள், அவர் வேறு பாதையில் சென்று விடாமல் இருக்க இளைஞர் குழு அமைக்கப்படும். அரசின் திட்டங்கள் நிறைய இருக்கிறது, அதை மக்களுக்கு பெற்று தர வழிவகை செய்யப்படும். ஷரீஅத் குழு ஒன்று அமைக்கப்படும் அது நூற்றுக்கு நூறு ஷரீஅத் சட்டப்படி செயல்படும். எவ்வித பரிந்துரைக்களுக்கும் அங்கு இடமில்லை என்று கூறி தனது ஏற்புரையை நிறைவு செய்தார்.





பின்னர் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பைத்துல்மால் நிர்வாகிகளின் பெயர்களை அறிவித்து அறிமுகம் செய்தார். ஜமாஅத் / பைத்துல்மால் நிர்வாகிகள் எழுந்து நின்று கூடியிருந்தோர்களுக்கு ஸலாம் சொல்லி அமர்ந்தனர்.

இறுதியில் ஜமாஅத் துணைத்தலைவர் O.A.W.பாவாஜான் நன்றியுரையாற்றினார்.

விழாத்துளிகள் விரைவில் பதிவிடப்படும்

களத்தொகுப்பு: MGF / ஹம்துன் அப்பாஸ்










மேலும் வாசிக்க>>>> "பதவியேற்றார் டாக்டர் நூர் முஹம்மது: updated..."

சனி, 11 பிப்ரவரி, 2012 4 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் S.நூர் முஹம்மது நாளை பதவி ஏற்க இருக்கும் சூழலில், J.ஹஸன் அலி என்பவர் விடுத்துள்ள பிரசுரம் தொடர்பாக சமுதாய அமைப்புகள் எழுப்பி இருக்கும் வினாக்கள், பேரூராட்சி மன்றத் தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் விடுத்துள்ள அறிக்கை இவற்றிற்கிடையில், டாக்டர் S.நூர் முஹம்மது இன்று MYPNOவிடம் கூறுகையில்:

நடுநிலையாளர்களான H.அப்துல் ஹமீது, S.காஜா சுல்தான் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் இறுதி நாளுக்கு முன் என்னை வந்து சந்தித்தனர்,

அதனடிப்படையில், சிதம்பரம் - கடலூர் ஆகிய ஊர்களில் இரு அமர்வுகள் நடத்தப்பட்டது, அப்போது பேசப்பட்டபடி B.ஹமீது கவுஸுக்கு ஜமாஅத் துணைத்தலைவர் பதவியும், M.E.அஷ்ரப் அலி, S.S.அலாவுதீன் ஆகியோர்களுக்கும் பொறுப்பு வழங்குவது என்றும் பேசப்பட்டபோது, ஊரின் ஒற்றுமையையும் நன்மையையும் கருதி, நான் சம்மதித்தேன். கூடுதலாக B.ஹமீது கவுஸுக்கு பைத்துல்மால் தலைவர் பதவியும் தர வேண்டும் என்றும் பேசப்பட்டபோது, நான் மவுனமாக கேட்டு கொண்டிருந்தேன்.

மேலும் தலைவராகிய நான் தவிர்க்க இயலாத சில நேரங்களில் ஜமாஅத் கூட்டங்களில் கலந்துக் கொள்ள இயலாத சூழ்நிலையில், துணைத்தலைவர் B.ஹமீது கவுஸுக்கு சிறப்பு அதிகாரம் வழங்க, ஒரு தீர்மானத்தினை கொண்டு வருகிறேன், சக நிர்வாகிகள் ஒப்புதல் அளித்தால் அவ்வாறே செயல்படலாம் என்றேன்.

நான் முன்பு தலைவராக பதவி வகித்த போது பைத்துல்மால் அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை என்பதால், எனக்கு பைத்துல்மால் அமைப்பு விதிகள் தெரியவில்லை, நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகே எனக்கு, பைத்துல்மால் அமைப்பு நிர்ணயச் சட்டவிதிகள் அடங்கிய புத்தகம் கா.மு.கவுஸ் மூலம் கிடைத்தது. அதை படித்து பார்த்த போது, ஜமாஅத் தலைவர் தான் பைத்துல்மால் அமைப்பின் தலைவராக இருக்க வேண்டும் என்று மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால், சட்டத்தின்படி B.ஹமீது கவுஸ் தலைவராக முடியாது என்பதால் அதற்கு உடன்பட மறுத்தேன்.

மற்றபடி அவர்கள் சொன்னதையும் கருத்தில் கொண்டு பைத்துல்மால் செயலாளராக M.E.அஷ்ரப் அலி, பொருளாளராக S.S.அலாவுதீன் என்று நிர்வாகிகள் பட்டியல் தயாரித்து அனுப்பிய போது, அவர்கள் சம்மதம் தெரிவிக்க மறுத்ததுடன் பைத்துல்மால் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்றனர். இச்சூழலில், காபந்து நிர்வாகமாக செயல்படும் இன்றைய ஜமாஅத் நிர்வாகம், இன்று காலை எனக்கு அனுப்பிய தபாலில், J.ஹஸன் அலி விடுத்துள்ள பிரசுரம் தொடர்பாக, சமுதாய அமைப்புகள் எழுப்பியுள்ள வினாக்களுக்கு பதில் கிடைக்காதவரை ஜமாஅத் நிர்வாகத்தை ஒப்படைக்கமாட்டோம் என்று எழுதி இருப்பதாக தெரிவித்தர்.





மேலும் அவர் கூறுகையில், காபந்து ஜமாஅத் தலைவர் இருதரப்பையும் அழைத்து 5 நிமிடங்களில் சுமூக தீர்வு காணாமல், விடை கிடைக்கும் வரை நிர்வாகத்தை தரமாட்டோம் என்று சொல்வது மிகுந்த ஆச்சரியத்தை தருவதோடு, இது குற்றவியல் நடைமுறைக்கு வழிவகுக்கும் என்றரர் டாக்டர் S.நூர் முஹம்மது .

ஹஸன் அலி வெளியிட்டிருக்கும் துண்டு பிரசுரம் தொடர்பாக கேட்ட போது, "அவர் மீடியேட்டர்களில் ஒருவராக இல்லை, அவர் இதனால் பாதிக்கப்படவுமில்லை. மேலும், இது சம்பந்தமான வினா எழுப்ப இருமுறை நடைபெற்ற சந்திப்புகளில் கலந்துக் கொண்டோர்களுக்கு மட்டுமே இதில் முழு உரிமை இருக்கிறது என்றார்.

சமுதாய அமைப்புகள் இப்போது எழுப்பி இருக்கும் வினாக்கள் தொடர்பாக கேட்டபோது, " சமுதாய நலனில் அக்கறை உள்ள இவர்கள் என்னை நேரடியாக சந்தித்து கேட்டிருக்கலாமே, என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சந்திப்பு: ஹம்துன் அப்பாஸ், MGF
மேலும் வாசிக்க>>>> "சட்டத்தில் இடமில்லை: டாக்டர் S.நூர் முஹம்மது"

0 கருத்துரைகள்!

ஒரு சில நாள்களாக நமது mypno.com தளம் தொழிற்நுட்பக் கோளாறுகளால் முடங்கியுள்ள நிலையில், வாசகர்களுடனான தொடர்பில் முடக்கம் ஏற்படக்கூடாது, என்ற நிலையில் நமது தளம் உடனடியாக நமது வலைப்பூவிற்கு திருப்பிவிடப்படுகிறது. வலைப்பூவிலேயே தற்காலிகமாக செய்திகள், தகவல்கள் உடனுக்குடன் வலையேற்றப்படுகின்றன.

இந்நிலையில், வலைத்தளத்தில் வைத்திருந்த மறுமொழி மட்டுறுத்தல் வலைப்பூவில் இல்லாமல் போனதால், எங்களை அறியாமல் சில தரக்குறைவான கருத்துகள் மறுமொழியில் வெளிவந்துள்ளன.

இச்சறுக்கல் உடனடியாக எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டவுடன் அதனைச் சரி செய்துவிட்டோம்.

இதனால் ஏற்பட்ட தேவையற்ற மன உளைச்சல்களுக்கு ஆசிரியர் குழுவின் உளப்பூர்வமான மனவருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புரிதலுக்கு நன்றி.

Editors
Mypno.com
மேலும் வாசிக்க>>>> "MYPNO முக்கிய அறிவிப்பு"

6 கருத்துரைகள்!


ஜெயின்பாவா தைக்கால் தெருவில் மர்ஹும் ஷேக்கா மரைக்காயர் அவர்களின் மகனாரும், ஹமீது கவுஸ் மரைக்காயர் அவர்களின் தம்பியும், மர்ஹும் யூனுஸ் மரைக்காயர் (கடலூர் OT) அவர்களின் மருமகனும், மர்ஹும் Y முஹம்மது சுல்தான் , மர்ஹும் Y. முஹம்மது ஹஸன், மர்ஹும் Y.M கமால், Y.ஷேக் அப்துல் காதர் (பேங்காக்) ஆகியோரின் மைத்துனரும், யஹ்யா மரைக்காயர் அவர்களின் மாமாவும், M. முஹம்மது இக்பால் (கடலூர் OT) அவர்களின் மாமனாரும், M.ஷாஹுல் ஹமீது, M.செய்யத் மரைக்காயர் ஆகியோரின் தகப்பனாருமான முஹம்மது முஸ்தபா மரைக்காயர் அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள்.

இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் வாத்தியாப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்தி: முஹம்மது முஸ்தபா மரைக்காயர்"

7 கருத்துரைகள்!


பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நாளை காலை மீராப்பள்ளியில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி, தனது முன்னிலையில் நடக்கும் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க>>>> "ஜமாஅத் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா: M.S.முஹம்மது யூனுஸ் அறிக்கை.!"

3 கருத்துரைகள்!

அஸ்ஸலாமு அலைக்கும் ,


கடலூர் O.T. யில் மர்ஹூம் அஹ்மது ஹுசைன் அவர்களின் மனைவியும், A.H. பக்கீர் மொஹியதீன் சாபு, A.H. அபூபக்கர் மௌலானா, A.H.குலாம் காதர் (ஹாஜி), A.H.உமர் சாபு இவர்களின் தாயாருமாகிய S.M. செய்துன்னிஷா (மோச்சம்மா) இன்று மதியம் 2.30 மணியளவில் கடலூர் O.T யில் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.


நாளைகாலை நல்லடக்கம் கடலூர் O.T. யில். இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் .
மேலும் வாசிக்க>>>> "மய்யத் செய்தி - கடலூர் O.T."

4 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கான தேர்தலில் டாக்டர் S. நூர் முஹம்மது போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, வரும் ஞாயிற்றுக்கிழமையன்று பதவியேற்க இருக்கும் நிலையில், ஜமாஅத் நிர்வாகிகள் யார் என்பதில் தொடங்கிய பரபரப்பு இன்று அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது.
பரங்கிப்பேட்டை சின்னக்கடை தெருவை சேர்ந்த J.ஹஸன் அலி என்பவர், டாக்டர் S.நூர் முஹம்மது போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதின் பின்னணி என்ன என்பதை தெரிவிக்கிறேன் என்று நேற்று மாலை வெளியிட்ட பிரசுரம் ஒன்றில் தெரிவித்திருந்தார். அப்பிரசுரம் இன்று ஜும்ஆ தொழுகைக்கு பின்னரும் வினியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பரங்கிப்பேட்டையில் செயல்பட்டு வரும், இஸ்லாமிய அமைப்புகளான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) நிர்வாகிகள் முத்துராஜா, ஃபாஜல் ஹுசேன், இக்பால், சாஹுல், ஹஸன் அலி, அன்சாரி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக(TMMK) நிர்வாகிகள் ஜாக்கீர், பிலால், நஜிரான், செய்யது, ஹஸன் அலி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத்(INTJ) நிர்வாகிகள் நஸ்ருத்தீன், கவுஸ் ஹமீது, எஹ்யா மரைக்காயர், ஹாஜா ஆகியோர் இன்றிரவு சுமார் 8.00 மணியளவில் பரங்கிப்பேட்டையில் ஒன்று கூடி, J.ஹஸன் அலி என்பவர் தெரிவித்திருக்கும் கருத்துக்களின் உண்மை நிலை பற்றி பொதுமக்களுக்கும், சமுதாய அமைப்புகளுக்கும் தெரியவில்லை.

பொதுமக்களிடம் குழப்பமான சூழ்நிலை இருப்பதால் ஊரின் பொதுக்குழு கூடி முடிவு செய்யப்பட வேண்டும். எனவே இதன் உண்மை நிலையை அறிந்து தெளிவு ஏற்படும் வரை பதவி பிரமாண நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கக் கூடாது என்று தலைமை தேர்தல் ஆணையாளர் ஆடிட்டர் I.முஹம்மது இல்யாஸை சந்தித்து முறையிட்டனர்.

இதற்கு பதிலளித்த முஹம்மது இல்யாஸ், “தேர்தல் முடிவடைந்து சான்றிதழ் வழங்கியதோடு தங்களது கடமை முடிவடைந்து விட்டது. தற்போதைய ஜமாஅத் நிர்வாகம் தான் பதவியேற்பிற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று ஜமாஅத் அமைப்பு நிர்ணயச் சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதால், தற்போதைய ஜமாஅத் நிர்வாகத்தை அணுகலாம் என்றார்.

பின்னர் மீராப்பள்ளியில் நடைபெற்ற சிறிது நேர ஆலோசனைக்கு பின்னர் தற்போதைய ஜமாஅத் தலைவர் (பொறுப்பு) I.இஸ்ஹாக் மரைக்காயரை இம்மூன்று அமைப்பினரும் சந்தித்து கேட்டனர். இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்டது உண்மை தான், ஆனால் எங்களின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஒரே நாள் தான் இருப்பதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றார்.

பின்னர் மீண்டும் மீராப்பள்ளியில் கூடி ஆலோசனை செய்த இம்மூன்று அமைப்பினரும், சனிக்கிழமை (11-02-2012) அன்று பரங்கிப்பேட்டையில் தங்கள் அமைப்புகளால் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்ற போதிலும், பொது அமைதியினை கருத்தில் கொண்டு அம்முடிவை கைவிடுவதாகவும், ஆனால் பொதுமக்களிடம் அதிக அளவில் கையெழுத்துகள் பெற்று ஜமாஅத் தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கும் மீராப்பள்ளி நிர்வாகி M.O.ஜமால் முஹம்மது வசம் பொதுமக்களின் கையெழுத்து அடங்கிய மனு வழங்கப்படும் என்று முடிவு செய்துள்ளனர்.

ஜமாஅத் தலைவர் பதவியேற்பிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சமுதாய அமைப்புகள், J.ஹஸன் அலி வெளியிட்டுள்ள பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்து உண்மை நிலை தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி இருப்பது பரங்கிப்பேட்டையில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க>>>> "ஜமாஅத் தேர்தல்: சமுதாய அமைப்புகள் போர்க்கொடி..!"

வியாழன், 9 பிப்ரவரி, 2012 0 கருத்துரைகள்!


பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியலை புதிதாகப் பொறுப்பேற்க உள்ள புதிய தலைவர் டாக்டர் எஸ். நூர் முஹம்மது நேற்று வெளியிட்டிருந்தார். அதில் புதிதாக மேலும் இரு நிர்வாகிகளையும் இன்று அறிவித்தார். 

இந்நிலையில், பைத்துல்மால் எனப்படும் ஜமாஅத்தின் பொதுநிதிக் கருவூலத்தின் நிர்வாகிகள் பட்டியலை சற்றுமுன் வெளியிட்டார்.

பைத்துல் மால் கமிட்டி நிர்வாகிகள்:

தலைவர்: 
டாக்டர் எஸ். நூர் முஹம்மது.

பொருளாளர்: 
எம்.கே. கலிக்குஜ் ஜமான்

நிர்வாகிகள்:

ஐ. ஹபீப் முஹம்மது
எம். எம். முஹம்மது முராது
ஜி. நிஜாமுத்தீன்
எஸ். முஹம்மது அப்துல் காதர்
எஸ். ஏ. ரியாஜ் அஹமது
ஹெச்.எம். காமில்
மேலும் வாசிக்க>>>> "பைத்துல்மால் கமிட்டி நிர்வாகிகள் அறிவிப்பு!"

0 கருத்துரைகள்!

டாக்டர் S.நூர் முஹம்மது தலைமையிலான பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் மேலும் இரு நிர்வாகிகள் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
M.அப்துல் காதர் மரைக்காயர் உமரி (தவ்லத்துன்னிசா அரபிக் கல்லூரி முதல்வர்) துணைத்தலைவராகவும்,
வழக்குரைஞர் முஹம்மது ஹனிபா செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க>>>> "ஜமாஅத் நிர்வாகிகள்: மேலும் இருவர் சேர்ப்பு"

0 கருத்துரைகள்!

 பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை வாரச் சந்தையிலிருந்து 15-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு சின்னூர் நோக்கி சென்ற குட்டியானை என்கிற சரக்கு வாகனம் சின்னூர் சுமங்கலி திருமண மண்டபம் அருகே உள்ள திருப்பத்தில் எதிரில் டிரிபிள்ஸில் வந்த ஒரு பைக் மீது மோதியதால் நிலை தடுமாறி சாய்ந்தது. இதனால் பைக்கில் வந்த மூவர் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஜமாஅத் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டனர்.
மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் சிலரை 108 அரசு ஆம்புலன்ஸ் மற்றும் ஜமாஅத் ஆம்புலன்ஸில் சிதம்பரம் மற்றும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

படங்கள்: ஜமான், முத்துராஜா
மேலும் வாசிக்க>>>> "குட்டியானை - பைக் மோதல்: கோர விபத்து!"

0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் எஸ்.நூர் முஹம்மது, வரும் 12ந் தேதி தலைவராக பொறுப்பேற்க இருக்கின்றார். பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே யூகங்கள் இறக்கை கட்டி அலையிலும் – வலையிலும் பறந்து வந்தது. கடந்த சில தினங்களாக நடத்தப்பட்டு வந்த தீவிர ஆலோசனைக்கு பிறகு தனது சக நிர்வாகிகள் பட்டியலை டாக்டர் நூர் முஹம்மது இறுதி செய்துள்ளார். இந்நிலையில் டாக்டர் எஸ்.நூர் முஹம்மது அறிவித்துள்ள நிர்வாகிகள் பட்டியல்:-

தலைவர் : 
டாக்டர் S. நூர் முஹம்மது

துணைத்தலைவர்கள் :
M.S. அலி அக்பர்,
S. O. செய்யது ஆரிஃப் (அல்ஹாஸ்),
S. முஹமது அலி (Rtd. தாசில்தார்)
பொதுச்செயலாளர்:
O.முஹம்மது கவுஸ் (Rtd. ஆர்.ஐ)

செயலாளர்கள் :  
M. சுல்தான் அப்துல் காதர்,
H. ஷாஜகான்,
G.Md. அன்சாரி,
S. முஸ்தபா,
A. முஹமது ஹனீஃபா,
A. ஹபீபுல்லா கான்

பொருளாளர்:   
M. K. கலிக்குஜ் ஜமான்,
மேலும் வாசிக்க>>>> "ஜமாஅத் நிர்வாகப் பட்டியல்"

சனி, 18 ஜூன், 2011 3 கருத்துரைகள்!

கடந்த சில மாதங்களாக, கட்டமைப்பு மறு சீரமைப்பு பணிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த MYPNO.COM இணையத்தளம், நேற்று முதல் தனது வழக்கமான சேவையினை மீண்டும் தொடங்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். எனவே வாசகர்கள் www.mypno.com தளத்திற்கு வருகை தந்து தங்களது ஆதரவினை நல்க வேண்டும் என்று ஆசிரியர் குழு சார்பில் கோருகிறோம். நன்றி
மேலும் வாசிக்க>>>> "வாங்க www.mypno.com தளத்திற்கு..!"

புதன், 15 ஜூன், 2011 5 கருத்துரைகள்!

நம்முடைய mypno.com இணைய தளம், சில மாதங்களாக, கட்டமைப்பு மறு சீரமைப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, சீரமைப்பு பணி முடிவடைந்த நிலையில், நம் இணைய தளம் உங்கள் முன் வலம் வர தயாராக இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ், வெள்ளிக்கிழமை முதல் நமது இணையதளம் செயல்பட தொடங்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இது நாள்வரை தங்கள் ஆர்வம் சற்றும் குறையாமல், தங்களது ஆதரவை நம்முடைய வலைப்பூவின் மூலம் பதிவு செய்தீர்கள்.

உங்கள் ஆதரவை தொடர்ந்து நாடுகின்றோம்.

விரைவில் பற்பல புதிய தகவல்களையும், சுவையான பதிவுகளையும் தங்கள் கண்முன் கொண்டுவர முயற்சித்து வருகின்றோம்.

உங்கள் ஆதரவையும் , கருத்துக்களையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

உங்கள் அன்புடன்
mypno.com ஆசிரியர் குழு
மேலும் வாசிக்க>>>> "புதிய கட்டமைப்புடன் உங்கள் MYPNO.COM"

7 கருத்துரைகள்!



முஸ்லிம்கள் அதிகம் வாழும் பல ஊர்களில் ஒவ்வொரு முஹல்லாவுக்கும் ஒரு ஜமாஅத் என்ற அடிப்படையில் ஊருக்கு குறைந்தது ஐந்து ஜமாஅத் என்றளவில் இருந்து ஐக்கியம் என்பது ஐயம் மிக்க வினாவாகவே இருக்கும், ஆனால் பெயருகேற்றப்படி ஒரே ஐக்கிய ஜமாஅத் என்பது, பரங்கிப்பேட்டைக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் முதன்மையான ஒன்றாகும்.

சமுதாய ஒற்றுமை, மத நல்லிணக்கம், கல்வி, மகளிர் நலன், வட்டியில்லா கடனுதவி, சிறுதொழில்களுக்கான வாய்ப்புகள், மருத்துவம், அவசரக்கால ஊர்திகள், இயற்கை இடையூறுகளின் போது உதவி என்று பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரும், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பல முஸ்லிம் ஊர்களுக்கு முன்னோடியாகவும் இருந்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

இதன் அடுத்த கட்டமாக அமைக்கப்பட்ட கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில், பல ஊர்களில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் பரங்கிப்பேட்டையுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் கடலூர் முதுநகர் (OT) ஜமாஅத்தார்கள் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் தலைமையிலான நிர்வாகிகளை கடந்த சில தினங்களுக்கு முன் சந்தித்து ஜமாஅத் செயல்பாடுகளை கேட்டறிந்தனர், மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைப்பெற்ற இச்சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நடைப்பெற்றது.

படம்: TNTJ PNO
மேலும் வாசிக்க>>>> "முன்னோடியாகிறது இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்..!"

2 கருத்துரைகள்!




சமச்சீர் கல்வி குழப்பத்தால் ஜூன் 1-ந்தேதி திறக்கப்பட வேண்டிய பள்ளிக்கூடம் ஜூன் 15 அன்று திறக்க அரசு உத்தரவிட்டது. மேலும் சமச்சீர் கல்வி குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இன்று பரங்கிப்பேட்டையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன, கடந்த 2 மாத காலமாக காலை நேரப்போக்குவரத்து இல்லாததின் காரணமாக அமைதியாக இருந்த பரங்கிப்பேட்டை நகர வீதிகளில் காலை 8 மணி முதல் பள்ளிக்கூட வேன்கள் - ஆட்டோக்கள் போக்குவரத்து மிகுந்ததால் வழக்கமான பரப்பரப்பு மீண்டும் காணப்பட்டது. பரங்கிப்பேட்டையின் " தி.நகர் ரங்கநாதன் தெரு" என்றழைக்கப்படும் மேட்டுத்தெரு வணிக வளாகங்களில், பள்ளிக்கூடங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நேற்று மாலை மக்கள் போக்குவரத்து அதிகமாக இருந்தது. மாணவ - மாணவிகளின் கல்வி சிறக்க mypno.com ஆசிரியர் குழு சார்பாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். மாணவ - மாணவிகளை வாழ்த்துகிறோம்.
மேலும் வாசிக்க>>>> "இறைவா..!, கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக..."

  • காவல் - 243224
  • மருத்துவமனை(G.H.) - 253996
  • ஆம்புலன்ஸ் - 253800
  • தீ - 243303
  • மின் வாரியம் - 253786
  • துணை மின்நிலையம் - 247220
  • தொலைபேசி BSNL - 243298
  • பேரூராட்சி - 243249
  • பேரூராட்சி - 243249
  • பஞ்சாயத்து யூனியன் - 243227
  • கேஸ் சர்வீஸ் - 243387
  • ஜமாஅத் - 253800
  • அஞ்சல் நிலையம் - 243203
  • சின்னகடை P.O. - 243230
  • இரயில்வே - 243228

  • Dr அங்கயற்கண்ணி - 253922
  • Dr அமுதா (SMC) . - 243392
  • Dr நகுதா Maricar - 243673
  • Dr பார்த்தசாரதி - 243396
  • Dr பிரேம்குமார் - 253580
  • Dr ஷகீலா பேகம் - 243234