புதன், 1 ஏப்ரல், 2009

கலெக்டருக்கு 'நெட்'டிலேயே மனு தரலாம்

பொதுமக்கள் குறைகள் குறித்த மனுக்களை மாவட்ட கலெக்டர்களிடம் இணையதளம் மூலமாகவே அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மற்றும் குறை தீர்வு மனுக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்படுகிறது. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது தொடர்பான பதிலும், மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, மனுக்கள் அளிப்பது மின்னணுமயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, எந்த மாவட்ட கலெக்டருக்கும் இணையதளம் மூலமே மனுக்களை அனுப்பலாம். அந்த மனுக்கள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, அவை மின்னணு முறையில் பரிசீலிக்கப்படும்.
மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், அதன் முன்னேற்றங்கள் குறித்து இணையதளம் மூலமே, மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க முடியும். இதற்கான இணையதள வசதி துவக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இணையதளமான www.tn.gov.in முகவரியில் சென்று, தேசிய தகவல் மைய உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய தளத்தில், தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக