பரங்கிப்பேட்டையில் போலீஸ் பற்றாக்குறையால் குற்றங்களை தடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
 பரங்கிப்பேட்டை போலீஸ் சரகத்தில் உள்ள 36 கிராமங்களில் தினந்தோறும் அடிதடி தகராறு, விபத்துகள், தற்கொலை சம்பவங்கள் நடக்கிறது. 
 சமீப காலமாக திருட்டு, கொள்ளை சம்பவங்களும் அதிகரித்துள்ளது. 
 பரங்கிப்பேட்டை ஸ்டேஷனில் குறைவான அளவில் போலீசார் உள்ளதால் தினமும் வரும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
ஒரு இன்ஸ்பெக்டர், 4 சப் இன்ஸ்பெக்டர்கள், 8 ஏட்டுகள், 6 போலீசார் உள்ளனர்.
ஒரு இன்ஸ்பெக்டர், 4 சப் இன்ஸ்பெக்டர்கள், 8 ஏட்டுகள், 6 போலீசார் உள்ளனர்.
 இவர்களில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் கடலூர் போலீஸ் பயிற்சி பள்ளிக்கும், மூன்று ஏட்டுகள் சிதம்பரம் டிராபிக், செக்போஸ்ட், ஒரு ஏட்டு ஏ.எஸ்.பி., அதிவிரைவுப்படை, ஒரு போலீஸ்காரர் கடலூர் சி.ஆர்.பி., டிரைவர், கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் என பல பணிகளுக்கு சென்றுவிடுகின்றனர்.
 இது போக சிலை பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு என பணி சுமைகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 
 இவை போக ஐந்து போலீசாரே பணியில் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. 
 இதனால் தொடரும் திருட்டு சம்பவங்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
Source: தினமலர்
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக