தொலைக்காட்சிப் பெட்டிகளெல்லாம் வெகுஜன மக்களிடம் வந்து சேராத, அந்த நாட்களில் 'சம்மர் விடுமுறை' என்பது நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு அன்று ஒரு திருவிழா போல் தான் இருக்கும்.
பள்ளி இறுதி நாள் அன்று ஏற்படும் அலாதி இன்பம் மற்ற நாட்களில் கிடைக்கும் இன்பங்களை விட மேலானதாக தெரியும்.
கோடை விடுமுறையில் எந்தந்த வகையில் நேரத்தை விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை ஒவ்வொருவருக்கும் மனம் கற்பனைக் கணக்கீட்டுக் கொண்டே இருக்கும்.
நூறு மில்லி மல்லாட்டை எண்ணெய், ஒரு கீதா சோப் வாங்கிட்டு வா என்று வீட்டில் கூறிய போது சூட்டில் போகாத கால்கள், கொதிக்கும் பொதி மண்ணில் காலணியை தாண்டி, தீமிதியாக சைக்கிள் டயர் வண்டி ஓட்டுவதற்கும் நுங்கு வண்டி விடுவதற்கும் என சாதாரணமான நிகழ்வாக கால்கள் ஓடி செல்லும்.
வெளியூரில் சொந்தம் இருப்பவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை வேற லெவலாக இருக்கும்,