சனி, 26 ஜனவரி, 2008

உழைக்கும் மைந்தர்கள்

அரேபியாவில் உப்புத் தொழில் செய்யும் பரங்கிப்பேட்டை சகோதரர்களைப் பேட்டிக் கண்டுள்ளோம். அதன் வீடியோ தொகுப்பு.

அரேபிய வாழ்க்கை சொல்லும் பாடம்


செவ்வாய், 22 ஜனவரி, 2008

சென்னையில் நடைபெற்ற PEACE மாநாடுபற்றி பரங்கிப்பேட்டை கல்விக்குழு தலைவர் பேட்டி


சென்னையில் நடைபெற்ற உலகலாவிய இஸ்லாமிய மாநாடு பற்றி அதில் கலந்து கொண்ட பரங்கிப்பேட்டை கல்விக்குழு தலைவர் பேட்டி

மாநாடு எப்படி இருந்தது?

மிகச்சிறப்பாக இருந்தது மாநாட்டு ஏற்பாடுகள், பேச்சாளர்கள், கலந்து கொண்ட மக்கள் கண்காட்சிகள், கலந்துரையாடல்கள், அனைத்தும் நிறைவாகவும் பெருமிதம் கொள்ளதக்க வகையிலும் இருந்தன.

மாநாட்டின் சிறப்பம்சமாக நீங்கள் கருதுவது...?

சமுதாயத்தில் இன்றைய நிலையில், இது போன்ற மாநாடு உணர்த்தும் கொள்கைகள் தாண்டிய சகோதரத்துவ ஒற்றுமை, பல்வேறு கொள்கைகள் சார்ந்த சகோதரர்கள், மூஃமின் என்ற அடிப்படையில் தங்கள் முகமூடிகளை கழற்றிவிட்டு அங்கு தேடலாக அலைந்தது நல்லவிஷயம். இதைதவிர அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சூடான் போன்ற நாடுகளிலிருந்து வந்திருந்த அறிஞர்கள் நடத்திய இஸ்லாமிய வகுப்புக்களும், பயிற்சி வகுப்புகளை(Workshop)யும் சொல்லலாம்.

பரங்கிப்பேட்டையிருந்து எத்தனை பேர் வந்தனர்?

தனிப்பட்ட முறையில் சகோதரர்கள் பலரும், அல்ஹஸனாத் மகளிர் கல்லூரி, மாணவிகளும் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் பள்ளிவாசல் தோறும் அறிவிப்பு செய்யப்பட்டும், விளம்பரங்கள் செய்யப்பட்டும் பிரயோஜனமிக்க விஷயங்களில் கலந்துகொள்வது என்பது நமதூரிpல் இன்னும் பழக்கமாகவில்லை என்பதை குறையாக அல்லாமல் ஆதங்கமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அருகில் நெய்வேலியில் புத்தக கண்காட்சி, கடலுரர் சிதம்பரம் போன்ற நகரங்;களி;ல் பல விழிப்புணர்வு கருத்தரங்கங்கள், ஏன் தற்போது சென்னை புத்தக கண்காட்சியில் கூட நாங்கள் கவனித்த வரை பெரிய அளவிளான பரங்கிமாமக்களின் பங்கேற்பு இல்லை என்பது வருத்தம்தான். இந்த மனப்போக்கை வரும் இளைய சமுதாயத்தினரிடம் மாற்ற கல்விகுழு இன்ஷh அல்லாஹ் முயலும். துஆ செய்யவும் கோருகிறோம்.

திங்கள், 21 ஜனவரி, 2008

அகலமாகிறது பரங்கிப்பேட்டை - புதுச்சத்திரம் நெடுஞ்சாலை


அகலமாகிறது பரங்கிப்பேட்டை - புதுச்சத்திரம் நெடுஞ்சாலை.
பெரியமதகிலிருருந்து புதுச்சத்திரம் வரையிலான 6 கி.மீ தூரமுள்ள நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு மழை காரணமாக தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தொடடரப்பட்டு 75 சதவீதத்தை தாண்டி வேகமாக நடைப்பெற்று வரும் இந்நெடுஞ்சாலைப் பணி விரைவில் முழுமடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நெடுஞ்சாலையில் முத்து நாடார் தோப்பு அருகே இருந்த சிறிய பாலம் ஒன்று மிக மோசமாக பழுதடைந்திருந்தது. இந்த நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலமும் போடப்பட்டுவிட்டது.
இதே போன்று பரங்கிப்பேட்டை - முட்லூர் சாலையும் விரைவில் சரிசெய்யப்பட்டு புதிய சாலை போடும் பணி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது தெரிகிறது. இப்பணி ஆரம்பித்தால் மட்டுமே, மிக மோசமான நிலையில் இருக்கும் பெரியத்தெருவின் சாலையும் சீரமையும்.