நன்றி: தினமலர்
வியாழன், 20 ஆகஸ்ட், 2009
வக்ஃபு சொத்துக்களை மீட்க வேண்டும் - முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம், கோரிக்கை
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009
மின்வாரிய அலுவலக இன்டர்நெட் பழுது: கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் அவதி

பரங்கிப்பேட்டை மின் வாரிய அலுவலகத்தில் இன்டர்நெட் பழுதால் கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் அவதியடைந்தனர்.
பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின்சார கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
மின்சார கட்டணம் 5ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை அபராதமின்றி செலுத்தலாம்.
கடந்த 15ம் தேதி சுதந்திர தினம் என்பதால் அரசு விடுமுறையானது.
மறுநாள் (16ம் தேதி) ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறையானது.
இதனால் நேற்று காலை மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் என்பதால் பரங்கிப்பேட்டை பகுதி மின் நுகர்வோர்கள் மின் வாரிய அலுவலகத்தில் அதிக அளவில் கூடினர்.
மழையையும் பொருட்படுத்தால் நீண்ட வரிசையில் நின்று பணம் செலுத்தினர்.
இந்நிலையில் மின்துறை அலுவலக இன்டர்நெட் பழுதானதால் மின் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது.
நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகமாகவே கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அலுவலகமே பரபரப்பாக காணப்பட்டது.
அதைதொடர்ந்து ஒருவழியாக இன்டர்நெட் பழுது நீக்கிய பின் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
இன்று நடைபெற்று வரும், ஜமாஅத் பொதுத் தேர்தலில் ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கிடையே... நீண்ட வரிசைகள், பலத்த போலீஸ் பாதுகாப்புகள், முடியாத நிலையிலும...