முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக செயல்வீரர்கள் கூட்டம் பரங்கிப்பேட்டையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமை தாங்கினார். கொள்கை பரப்பு செயலாளர் பக்ருதீன், மாவட்ட தலைவர் முஸ்தபா கமால் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் சாஹுல் ஹமீது வரவேற்றார். கூட்டத்தில் புதிய நகர தலைவராக அன்வர் அலி கான், செயலாளராக பாபா பக்ருதீன், துணை செயலாளராக செய்யது அப்பாஸ், முஹம்மது இர்பான், பொருளாளராக கமருதீன், இளைஞரணி தலைவர் செய்யது ஆலம், செயலாளர் செய்யது முஸ்தபா, மற்றும் நிர்வாகிகளாக அஹமது மரைக்காயர்,அப்துல் மாலிக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் பரங்கிப்பேட்டையில் உள்ள வக்ஃபு சொத்துக்களை வக்ஃபு வாரியம் மீட்க வேண்டும், அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்று தினமலர் நாளேடு (இ-பேப்பரில்) சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக