திங்கள், 27 மே, 2013

இறப்புச் செய்தி: பாலு (எ) பாலசுப்ரமணியன்

பரங்கிப்பேட்டை நெல்லுக்கடை தெரு, ரங்கசாமி செட்டியார்(late) அவர்களின் பேரனும், பக்கிரி செட்டியார்(late)  அவர்களின் மகனும், பொண்ணம்பலம் செட்டியார், மாணிக்கம் செட்டியார், சுப்ரமணியம் செட்டியார், ராஜேந்திரன் செட்டியார், வேல்முருகன் செட்டியார் ஆகியோரின் சகோதர்ருமான பாலசுப்ரமணியன்  நேற்று இரவு 1 மணி அளவில் காலமாகிவிட்டார்.

இன்று மாலை 4 மணி அளவில் இறுதி ஊர்வலம் அவர்களது இல்லத்தில் இருந்து புறப்படும்.
தகவல்: மரு. லெ. பூபதி

வெள்ளி, 24 மே, 2013

வாத்தியாப்பள்ளி மஸ்ஜித் திறப்பு விழா

வரலாற்று சிறப்பு மிக்க மஹ்மூது பந்தர் பரங்கிப்பேட்டை மாநகரில் மஸ்ஜித் என்ற இறையில்ல பள்ளிவாசல்கள் நிறைந்துள்ளன. அவற்றில் பழமையான பள்ளிவாசல்கள் புணர்நிர்மானம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பழமையும், பாரம்பரியமும் மிக்க "செய்யது அலீ என்ற வாத்தியாப்பள்ளி மஸ்ஜித்" பழைய பள்ளிக்கு அருகிலேயே புதிதாக உருவாக்கப்பட்டு, வருகின்ற ஜூன் மாத் முதல் ஞாயிற்றுக்கிழமை (2ந் தேதி) மாலை 5 மணிக்கு திறப்பு விழா காண இருக்கின்றது. ஊரின் முக்கிய பிரமுகர்களும், மார்க்க அறிஞர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். 

சிறப்பு விழாவிற்கு முதல் நாள் 1ந் தேதி சனிக்கிழமை பெண்களுக்கு சிறப்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள திறப்பு விழா பிரசுரத்தில் பாணலாம்.



பிரசுரம் உதவி: ஹமீத மரைக்காயர்
படம் உதவி : pno.news


புதன், 22 மே, 2013

மனிதமுக உருவில் இறந்து பிறந்த ஆட்டுக்குட்டி!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே, மனித உருவில் இறந்தே பிறந்த ஆட்டுக்குட்டியை ஏராளமானோர் பார்த்து வியந்தனர். பரங்கிப்பேட்டையை அடுத்த பு. மடுவங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜக்கண்ணு. விவசாயியான இவர் 20க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நிறைமாத சினையாக இருந்த ஆடு ஒன்று, நேற்று  கடும் சிரமத்துடன் 4 குட்டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்டி உயிருடனு; 3 குட்டிகள் இறந்து; பிறந்தது. இதில் ஒன்றுக்கு மனித உருவத்தில் இறந்தே பிறந்ததை கண்ட ராஜக்கண்ணு அதிர்ச்சியடைந்தார். மனித முக வடிவில் இருந்த ஆட்டுக்குட்டியை அப்பகுதி மக்கள் வியப்புடனும் பரிதாப்பத்துடளும் பார்த்து சென்றனர்.. .தகவலறிந்த கால்நடை மருத்துவ ஆய்வாளர்கள் ஆட்டுக்குட்டியின் உடலை கால்நடைங் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு எடுத்து சென்றார்.