வியாழன், 8 ஆகஸ்ட், 2013

வளைகுடா சிங்கப்பூரில் பரங்கிப்பேட்டையர்கள் உற்சாகம்!



வளைகுடா நாடுகளிலும், சிங்கப்பூரிலும் ஹிஜ்ரி 1434 (2013) ஆண்டின் ரமலான் மாதம் நேற்று நிறைவடைந்ததையொட்டிமிகுந்த உற்சாகத்துடன் இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் இன்று நோன்பு பெருநாள் தொழுகைக்குப் பிறகு ஒன்றுகூடல் மற்றும் சந்திப்புகள் நடைபெற்றது. இதில் தமது வாழ்த்துகளை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.

புதன், 7 ஆகஸ்ட், 2013

கிழக்கு மாகாண சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!




தம்மாம்: சவுதி அரேபியா, கிழக்கு மாகாணம், பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் மாலிமார்  இருப்பிடத்தில் இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பரங்கிப்பேட்டைவாசிகள் திரளாக கலந்துக் கொண்டார்கள். .

இந்நிகழ்ச்சியின்போது, பிஃத்ராவிற்க்காக அன்றைய தேதிவரை வசூலிக்கப்பட்ட தொகை மற்றும் கடந்த 3 மாதங்களில் சதக்காவாக வசூலிக்கப்பட்ட தொகையையும் அறிவிக்கப்பட்டு. பிஃத்ரா மற்றும் சதக்கா வழங்கிய மற்றும் வசூலித்த அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது..

நோன்பு பெருநாள்: ஹிஜ்ரா கமிட்டி..!







பரங்கிப்பேட்டை: ஈகைத்திருநாள் என்றழைக்கப்படும், நோன்பு பெருநாள் இன்று (07.08.2013)  பரங்கிப்பேட்டை நகரில் ஹிஜ்ரா கமிட்டியினரால் கொண்டாடப்பட்டது. கடந்த மாதம் 9-ஆம் தேதி முதல் நோன்பு நோற்ற இவ்வமைப்பினர் நேற்றோடு ரமலான் மாதத்தினை 29-நாட்களாக பூர்த்தி செய்து இன்று காலை 7.40 மணிக்கு கலிமா நகரில் உள்ள திடலில் சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகைக்கு பின்னர் தமிழில் உரை நிகழ்த்தப்பட்டது.