புதன், 25 செப்டம்பர், 2013

தி.மு.க சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி..!


பரங்கிப்பேட்டை: தி.மு.கழக தலைவர் கருணாநிதி எழுதிய "நீதி வெல்லும், நிச்சயம் வெல்லும்" என்ற தலைப்பிலான அறிக்கையினை துண்டு பிரசுரமாக பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி பரங்கிப்பேட்டை தி.மு.க. சார்பில் நடைபெற்றது. 

நகர தி.மு.க.செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் முனைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் கலந்துக் கொண்டு சஞ்சீவிராயர் கோயில் தெரு, கச்சேரி தெரு, உள்ளிட்ட பரங்கிப்பேட்டை நகர பகுதிகளில் வழங்கினார். 

கடலூர் மாவட்ட தி.மு.க.பிரதிநிதி ஏ.ஆர்.முனவர் உசேன் முன்னிலையில் நடைபெற்ற, இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன், நகர அவைத்தலைவர் தங்கவேல், ஒன்றிய பிரதிநிதிகள் கோமு, வேலவன், நகர நிர்வாகிகள் மாமுன் அலி மாலிமார், ஆரிபுல்லா, மாயா உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்துக்கொண்டனர்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

கத்தாரில் பரங்கிப்பேட்டையை சேர்ந்த சிறுவன் ஃபஹீம் மரணம்

நமது தளத்தின் ஆசிரியர் எம்.ஐ.சிராஜூத்தீனுடைய மகன், ஐந்து வயதான ஃபஹீம் ஒரு வாரத்திற்கு முன்பு கத்தாரில் திறந்திருந்த சாக்கடை ஒன்றில் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11மணியளவில் மரணம் அடைந்தார்  என்பதை வருத்தத்துடன் அறியத் தருகிறோம்.

எங்களில் ஒருவரான சகோ. சிராஜ் மற்றும் குடும்பத்தினர்களுக்கு   mypno.com சார்பில்  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், ஃபாஹிமுடைய மறுமை நல்வாழ்வுக்கும், சிராஜ் குடும்பத்தாரின் மனவலிமைக்கும் இறையைப் பிரார்த்திக்கிறோம்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

ஈத் மிலன் விழா! மாவட்ட அளவிலான புனித ஈகைத் திருநாள் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா!!

ஈகைத்திருநாள் மகிழ்ச்சியினை அனைத்து சமுதாயத்தினருடனும் பகிர்ந்து கொள்ளும் மனிதநேய விழாவும், மாவட்ட அளவிலான புனித ஈகைத் திருநாள் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழாவும் மீராப்பள்ளித் தெரு மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் நடைப்பெற்றன.
 
நிகழ்ச்சியினை M.H. கபீர் அஹமது மதனி அவர்கள் கிராத் ஓதி துவக்கி வைக்க, இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் செயல் தலைவரும், பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவருமான டாக்டர் M.S. முஹம்மது யூனுஸ் அவர்கள் முன்னிலையில், இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் கேப்டன் M. ஹமீது அப்துல் காதர் தலைமையில் விழா தொடங்கியது விழாவிற்க்கு சிறப்பு அழைப்பளார்களாக டாக்டர் K.V.S  ஹபீப் முஹம்மது அவர்களும், ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் M. அப்துஸ் ஸமது மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் K. பால கிருஷ்ணன்  ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
 
மாற்று மதத்தினை சார்ந்த மாணவ-மாணவிகளுக்கு நடைப்பெற்ற கட்டுரைப் போட்டியில் சுமார் 460 கட்டுரைகள் பெறப்பட்டு, அதில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் முறையே 15,000, 10,000 மற்றும் 5,000 ரொக்க பணமாகவும், புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  முதல் 50 போட்டியாளருக்கு சிறப்பு ஆறுதல் பரிசும், மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும்  ஆறுதல் பரிசும் வழங்கப் பட்டன.  வெளி ஊரிலிருந்து வந்த மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்களுக்கு பகல் உணவு வழங்கப்பட்டது .
 
விழாவினை  நிகழ்ச்சி அமைப்பாளர் L. ஹமீது மரைக்காயர்  சிறப்பாக தொகுத்து வழங்கினார்.