ஞாயிறு, 6 அக்டோபர், 2013

இன்றைய சாதனையாளர்; நாளைய ஆளுமை

ஆளுமைகளை பற்றி நாள்தோறும் நாம் பேசி வருகிறோம். உருவாகவோ உருவாக்கவோ முயற்சிகள் என்று பார்த்தாலோ மிக சொற்பமாகவே இருக்கும். இறைவன் அருளால் நமதூரிலிருந்து திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியில் B.Com இறுதியாண்டு பயின்று வரும் (இண்டோமால்) ஜுனைத் அவர்களின்  மகனார் J. முஹம்மது சுஹைப் உஸ்மான் தனது சில சாதனைகள் மூலம் தன்னம்பிக்கை அளிக்கிறார். 

கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் "BEST MANAGER" டைட்டிலை சமீபத்தில் வென்றிருக்கும் இவர் DEBATE எனப்படும் விவாத போட்டியில் பல்கலைகழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதே வரிசையில் தென்னிந்திய அளவில் பல்கலைகழகத்தை பிரதிநிதித்துவபடுத்துகிறார். 

முன்னதாக கால்பந்து விளையாட்டில் பிராந்திய / மாவட்ட அளவில் பல முதலிடங்களையும், மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டும் இருக்கிறார். 

மாணவர் மேலும் பல சாதனைகளை புரிய MYPNO சார்பில் வாழ்த்துகிறோம்.     



சனி, 28 செப்டம்பர், 2013

மார்க்சிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்

சிரியா நாட்டின் மீது தாக்குதல் நடத்தவிருக்கும் அமெரிக்காவை கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சஞ்சீவிராயர் கோவில் தெரு முனையில் நடைப்பெற்றது. 

இந்த ஆர்பாட்டத்திற்க்கு நகர செயலாளர் M. நூர் முஹம்மது தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது  "அமெரிக்காவே! சிரியாவை தாக்காதே!!" "எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தானை தாக்கி அழித்தது போன்று இப்போது சிரியாவை கொள்ளையடிக்க போர் தொடுக்காதே!" போன்ற கோஷங்கள் எழுப்பபட்டன. 

கண்டன உரையை சிதம்பர சட்டமன்ற உறுப்பினர் K. பாலகிருஷ்ணன் நிகழ்தினார். கூட்டத்தில் ரமேஷ் பாபு, கற்பனை செல்வம், ராஜாராமன், சிவலிங்கம், மணி, காந்தி, ஜீவா, சுதாகர், இளம்பாரதி, சண்முகசுந்தரம் மற்றும் குப்புசாமி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.


செய்தி & படங்கள்: ஹம்துன் அஷ்ரஃப்

தி.மு.க. வின் தெருமுனை பிரச்சார கூட்டம்

பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ஜெயலலிதா அரசின் அவலங்களை விளக்கி தெருமுனை பிரச்சார கூட்டம் சின்னக்கடை தெருவில் நேற்று நடைப்பெற்றது.

தலைமை கழகப் பேச்சாளர்கள் தானுர் சிவகொழுந்து, பொன்னேரி சிவா, மற்றும் வளவனுர் மணிமாறன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 

இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள் தலைமை தாங்கினார். இக்கூட்டதில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் M.S. முஹம்மது யூனுஸ், துனைத்தலைவர் நடராஜ், மாவட்ட பிரதிநிதி முனவ்வர் ஹுஸைன், இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திகேயேன் மற்றும் தங்கவேல், நல்லதம்பி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் காஜா கமால், ஹபீபூர் ரஹ்மான், ஜாஃபர் மற்றும் பொற்செல்வி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.




செய்தி & படங்கள்: ஹம்துன் அஷ்ரஃப்