வியாழன், 8 அக்டோபர், 2009

புதிய மன்றம் துவக்கம்!

கத்தார் வாழ் பரங்கிப்பேட்டை முஸ்லிம்களை ஒன்றிணைத்து ஊரில் இருக்கும் ஏழைகளுக்கு மருத்துவம்,திருமணம் மற்றும் கல்விக்கு உதவுவதை பிரதான நோக்கமாக கொண்டு கத்தார்-பரங்கிப்பேட்டை இஸ்லாமிய மன்றம்
QATAR-PARANGIPETTAI ISLAMIC FORUM(Q-PIF)துவங்கப்பட்டுள்ளது.

நீண்ட கால முயற்சியின் பலனாக கடந்த (வியாழக்கிழமை) இரவு ஜனாப்.ஹசன் அலி அறை வளாகத்தில் நடைபெற்ற அமர்வில் கீழ்க்கண்ட சகோதரர்கள் மன்றத்திற்கான நிர்வாகிகளாக தேர்ந்தெடுப்பட்டனர்.
தலைவர் - ஜனாப்.S.தாஹா மரைக்காயர்
துணைத்தலைவர் - ஜனாப்.M.ஹஸன் பசிரி
செயலாளர் - ஜனாப்..D.அபூ பக்கர்(ராஜா)
துணைச் செயலாளர் - ஜனாப்.H.M.நூர் ஜலாலுதீன்
பொருளாளர் - ஜனாப்.M.I முஹம்மது சிராஜுத்தீன்

அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது

பரங்கிப்பேட்டை:

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்ற எளிய விழாவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார் பேரூராட்சித் தலைவரும் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான முஹமது யூனுஸ்.


இவ்விழாவிற்கு பரங்கிப்பேட்டை ஊராட்சித் தலைவர் முத்துப் பெருமாள், முன்னால் தலைமை ஆசிரியர் இராஜகோபால் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்துக் கொண்டு உரையாற்றினார்கள்.