வியாழன், 11 நவம்பர், 2010

விஷ வண்டு


கடலூரில்லிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள பெரியகுமட்டி கிராமம் அருகே வயல்வழியில் இருக்கும் பனைமரத்தில் சில இடங்களில் விஷவண்டுக்கள் கூடுக்கட்டி இருந்தன இவை அந்தவழியாக செல்பவர்களுக்கு தொந்தரவுக்கொடுத்து வந்தன இதனைஅறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்துச்சென்று விஷ வண்டுக்களை அழித்து பொதுமக்களை வண்டுக்களின் கடியில்யிருந்து காப்பாற்றினர்.

திங்கள், 8 நவம்பர், 2010

ஜகா வாங்கியது ஜல்...!

கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கிய வட கிழக்குப் பருவ மழை புயலாக மாறி ''ஜல்'' என்றபெயரில் ஊர் உலா வந்தது நாம் அறிந்ததே, காலம் கடந்து தொடங்கிய பருவமழையால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைபொழிந்தாலும், சில இடங்களில் மழையின் சுவ்டே தெரியவில்லை என்பது குறிப்பிடதக்கது.மழையை எதிர்பார்த்திருந்த விவசாயிகளுக்கு சமீபத்திய மழை மகிழ்சியை கொடுத்தாலும்,வரும்காலங்களில் விவசாயத்திற்க்கு தண்ணிர் தேவை அதிகமாகவே இருக்கும் எனநம்பலாம்.கடந்தகாலத்தில் புயலாக ஊருக்குவந்த ''நிஷா-லைலா''க்களால் பாதிப்பு அதிகமிருந்தாலும், விவசாயத்திற்க்கு தேவையான தண்ணீர் கிடைத்தது ஆனால் இந்தவருடம் தண்ணீரின் தேவை விவசாயிகளுக்கு கண்ணீரைதான் வரவைக்கும்.






பரங்கிப்பேட்டையை பொருத்தவரையில் நேற்று விடாமல் தூறிய மழை 10 மி.மீட்டரோடு தன் பணியை நிறுத்திக்கொண்டு வெயிலுக்கு வெள்ளைக் கொடி காட்டியது. இந்நிலையில் கடலூர் உட்பட 11 மாவட்டங்களின் கல்வி நிறுவனங்களுக்கு மழைக்காரணமாக தமிழகரசு விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 7 நவம்பர், 2010

மழை துளிகள்...

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள (ஜல் புயல்) காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைபெய்துவருகிறது.

இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக்கடலிலுருந்து மத்திய மேற்குவங்க கடலை நோக்கி நகர்வதால் சென்னை அருகே இன்றிரவு கரையை கடக்கும் என எதிப்பார்க்கப்படுகின்றது...

இதன்காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது , நேற்றிரவிலிருந்து நமதூர் பரங்கிப்பேட்டையில் ஆங்காங்கே மழை பெய்ந்து வருகிறது. இதனால் கடலோரகிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்கசெல்லவில்லை.மாவட்டநிர்வாகமும்,முனெச்சரிக்கையாக ''புயல்-வெள்ள பாதுகாப்புக்காக தயார் நிலையில் தீயணைப்பு வீரர்களை வைத்துள்ளது.








ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்க்காக இன்றிரவு விமானநிலையம் செல்லயிருந்த ஹஜ் பயணிகள் புயல்-மழைக்காரணமாக முன்கூட்டியே செல்லயிருக்கிறார்கள்.