ஞாயிறு, 15 மே, 2011

சமூக நலத்துறை அமைச்சராகிறார் செல்வி ராமஜெயம்!

புவனகிரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள பரங்கிப்பேட்டையை சார்ந்த செல்வி ராமஜெயம் அமையப் போகும் தமிழக அமைச்சரவையில் இடம்பெற உள்ளார். ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவி ஏற்க இருக்கிறது. இதில் செல்வி ராமஜெயத்திற்கு சமூக நலத்துறை ஒதுக்கப்படுகிறது. இரண்டாவது முறையாக வெற்றியை தக்க வைத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. புவனகிரி தொகுதியிலிருந்து பரங்கிப்பேட்டை சிதம்பரம் தொகுதியில் இணைக்கப்ட்டுவிட்டாலும், பரங்கிப்பேட்டையில் இவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி பலரும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழக புதிய அமைச்சரவை- முழுப்பட்டியல்!



சென்னை: தமிழக சட்டசபை அ.தி.மு.க., தலைவராக பொதுசெயலர் ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் அவர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து கவர்னரரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தொடர்ந்து கவர்னர் விடுத்த அழைப்பின்பேரில் நாளை ( 16 ம் தேதி ) முதல்வராக பதவியேற்கிறார்.

இதனிடையே, நாளை பதவியேற்கவுள்ள அமைச்சர்கள் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா : முதலமைச்சர்

ஒ பன்னீர்செல்வம் : நிதித்துறை....

செங்கோட்டையன்: விவசாயம்

கே பி முனுசாமி: உள்ளாட்சி துறை

பி தங்கமணி : வருவாய்துறை

நத்தம் விஸ்வநாதன்: மின்சார துறை

வைத்தியலிங்கம் : வீட்டு வசதி துறை

சி வி சண்முகம்: பள்ளி கல்வி துறை

கே வி ராமலிங்கம்: பொதுப்பணித்துறை

கருப்பசாமி : கால்நடைத்துறை

செந்தில் பாலாஜி : போக்குவரத்துத்துறை

சுப்பையா : சட்டத்துறை

வி எஸ் விஜய் : மக்கள் நலவாழ்வுத்துறை

ஆர் பி உதயகுமார் : தகவல் தொழில்நுட்பம்

செல்லூர் ராஜு: கூட்டுறவுத்துறை

மரியம்பிச்சை : சுற்றுசூழல்துறை

சண்முகவேல்:தொழில்துறை

செல்வி ராமஜெயம்: சமுகநலம்

பச்சைமால் : வனத்துறை

சின்னையா : பிற்படுத்த பட்டோர் நலன்


என் சுப்ரமணியன் : ஆதிதிராவிடர் நலன்

கோகுல இந்திரா : வணிக வரித்துறை

பி வி ரமணா : கைத்தறித்துறை

என் ஆர் சிவபதி : விளையாட்டுத்துறை

அக்ரி கிருஸ்ணமூர்த்தி : உணவுத்துறை

பழனியப்பன் : உயர் கல்வி துறை

எஸ் பி சண்முகநாதன் : அறநிலையத்துறை

எம் சி சம்பத் : ஊரக தொழில்துறை

எஸ் பி வேலுமணி : சிறப்பு திட்ட அமலாக்கம்

ஜி செந்தமிழன் : செய்தித்துறை

ஜெயபால் : மீன்வளத்துறை

செல்லபாண்டியன் : தொழிலாளர் நலன்

புத்தி சந்திரன் : சுற்றுலாத்துறை

எடப்பாடி பழனிசாமி : நெடுஞ்சாலை துறை

சனி, 14 மே, 2011

பரங்கிப்பேட்டை மாணவிக்கு ரியாத் நிகழ்ச்சியில் வெற்றிப்பரிசளிப்பு

.
தஃபர்ரஜ் நற்பணி அமைப்பு நடத்திய பல்சுவை நிகழ்ச்சி கடந்த 13 - 05 - 2011 அன்று ரியாத்தில் நதா, முஹம்மதியா மகிழகங்களில் சிறப்புடன் நடைபெற்றது.

அவ்வமயம், கடந்த ஆண்டு ரியாத்தில் பன்னாட்டு இந்தியப்பள்ளியில் C B S E பத்தாம் வகுப்பில் தமிழில் முதல் நிலை பெற்ற மாணவ மாணவிகள் பாராட்டும் கேடயமும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். நடந்து முடிந்த மேல்நிலைப் பள்ளித் தேர்வில் 1180 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் ஆறாவதாக வந்த மாணவர், பன்னாட்டு இந்தியப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்னும் பெருமிதங் கொண்டு அவருடைய தகப்பனார் ரிபாயி அவர்களிடம் பாராட்டும், வெகுமதியான பரிசிலும் வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டு CBSE பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழில் முதல் நிலை பெற்ற மாணவி ஹமீதா நஸ்லுன் சிதாரா பரங்கிப்பேட்டை மாணவியாவார். அவருடைய தகப்பனார் ஜாஃபர் அலி ரியாத்தில் பணி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இப்னுஹம்துன் செயலாற்றினார்.