திங்கள், 15 ஏப்ரல், 2013

கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை போல் ஸ்டார் அமைப்பு மற்றும் கல்விக்குழு (இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்) இனைந்து நடத்திய 10, 11, 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான மேற்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணிவரை கலிமா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
 
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவர் (பொறுப்பு) அலி அக்பர் அவர்கள் தலைமை ஏற்றார். போல் ஸ்டார் அமைப்பின் தலைவர் ஹமீது அப்துல் காதர் அவர்கள் முன்னிலை வகித்தார். போல் ஸ்டார் அமைப்பின் செயலாளர் செய்யது அலி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கல்விக்குழுவின் முஹம்மத் அலி (ஜமீல்) குர்ஆன் கிராஅத் (தமிழாக்கத்துடன்) ஓதினார்.    
   
சிறப்பு விருந்தினர் மற்றும் வழிகாட்டல் உரை நிகழ்த்திய இளையான்குடி ஜாகிர் ஹுசைன் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் ஆபிதீன் அவர்கள் சொல்வன்மை மிக்க முறையில் தனது உரையினை துவங்கி கல்வியின் அவசியத்தை மாணவர்களும் பெற்றோர்களும் தெளிவாக புரிந்துக்கொள்ளும் வண்ணம் உரையாற்றினார். 

இத்தனை வகையான படிப்புக்கள் உள்ளனவா என்று வந்திருந்த மாணவர்கள் வியக்கும் வண்ணம் கிட்டத்தட்ட 100 வகையான படிப்புக்களை பற்றி விளக்கமாக கூறினார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம் பெரிய ஸ்லைட்டுடன் கூடிய பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் தான். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விஷயங்கள் எளிதில் புரியும் வண்ணம் ஒவ்வொரு படிப்பையும் படங்களாக ஸ்லைட் மூலம் ஓடவிட்டு காட்டி தொகுத்து வழங்கியது சொல்லவந்த விஷயத்தை பற்றி தெளிவை வழங்கியது. 

பிறகு சில மாணவர்கள் கேள்விகள் கேட்டனர். அவற்றிக்கு பதிலளிக்கப்படது. நிகழ்ச்சியின் முடிவில் நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள் (FEEDBACK / SUGGESTIONS) கேட்டு வாங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் குளிர்பானங்களும் பிஸ்கட்களும் வழங்கப்பட்டது.

-அபூ பிரின்சஸ்

சனி, 13 ஏப்ரல், 2013

கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை சங்க தலைவர் பதவிக்கு வரும் 19 அன்று தேர்தல்




தம்மாம்: சவூதி அரேபியா கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் பதவிக்கு எதிர்வரும் 19-ந்தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் அறிவிப்பை அதன் தலைவர் எஸ். வஜ்ஹஹுத்தீன் ஏற்கனவே கடந்த மாதம் அறிவித்து விட்டாலும், தேர்தல் குறித்த சலசலப்புகள் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று தம்மாமில் நடைபெற்ற  முக்கிய கூட்டத்தில் தேர்தல் குறித்து நிலவிவந்த பல்வேறு விசயங்களும் பேசித் தீர்க்கப்பட்டு சுமூக முடிவுகள் எடுக்கப்பட்டது.

ரயில்வே பாதையில் நடந்து சென்ற ஏழை வியாபாரி ரயில் மோதி பலி!


பரங்கிப்பேட்டை:  பரங்கிப்பேட்டை கடலூர் ரயில்வே பாதையில்  புதுசத்திரம் அருகே இன்று காலை பரங்கிப்பேட்டை  சார்ந்த ஒருவர் ரயில்வே பாதையில் நடந்து சென்றபோது வேகமாக கடந்து சென்ற ரயிலில் அடிப்பட்டு மிகவும் மோசமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
 
இவர் பரங்கிப்பேட்டை பெரிய ஆசரக்கான தெருவை சேர்ந்த நன்னாபாய் உடைய மகன் ஷேக் மதார் (55) என்றும் இவர்  ஒமதண்ணீர் விற்பபனை செய்பவர் என்றும்தெரிய வந்தது. இவரது சிதைந்த உடல் மற்றும் பாகங்களை தண்டவாளத்திலிருந்து  பரங்கிப்பேட்டை இளைஞர்கள் அப்புறப்படுத்தினர். பின்னர் இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
 
படம்: முத்துராஜா