செவ்வாய், 9 ஜூலை, 2013

சிங்கப்பூரில் ரமலான் மாதம் தொடங்கியது..!

சிங்கப்பூர்: முஸ்லிம்களின் புனிதமிகு ரமலான் மாதம் சிங்கப்பூரில் இன்று மாலை தொடங்கியது. இதனையொட்டி அனைத்து பள்ளிவாசல்களிலும் வழக்கமான தொழுகைக்கு பிறகு சிறப்பு தொழுகை நடைபெற்றது. சிங்கப்பூர்  டன்லப் வீதியில் உள்ள அப்துல் கபூர் பள்ளியில் நடைபெற்ற  சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துக் கொண்டனர். இதனையொட்டி பள்ளி வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது

வெள்ளி, 5 ஜூலை, 2013

மக்தப் மதரஸா ஆண்டு விழா!







பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பள்ளிவாசல்களில் நடைபெற்று வரும் குர்ஆன் மக்தப் மதரஸாவின் ஆண்டு விழா கடந்த வாரத்தில் நடைப்பெற்றது. மீராப்பள்ளி, கவுஸ் பள்ளி, மக்தூம் அப்பா பள்ளியில் நடைபெற்ற மக்தப் மதரஸா ஆண்டு விழாக்களில் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

இந்த ஆண்டு விழாவில், மதரஸா மாணவ - மாணவியரின் கிராஅத், பயான் போட்டிகள் நடைப்பபெற்றன. இதில் பங்கேற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.