பரங்கிப்பேட்டையில் கடந்த வாரம் பெய்த கனமழையின் பாதிப்பிற்கு பிறகு இயல்பு நிலை முழுமையாக திரும்பிவருகிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரும் வடியத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் கடலூர் பகுதிகளில் விஷக்காய்ச்சல் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளதால் மாவட்டம் முழுக்க நோய் தடுப்பு நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றது.

இது பரங்கிப்பேட்டை பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் பேரூராட்சி மன்ற தலைவர் முஹமது யூனுஸ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'இது குறித்து எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை. பரங்கிப்பேட்டை பகுதி முழுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ குழுவும் களத்தில் உள்ளது. எனவே இறையருளால் நமதூர் பகுதியில் நோய் பரவும் ஆபத்து எதுவுமில்லை' என்றார் உறுதியாக.
பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்கிறது.
தொடர் மழை காரணமாக கடந்த வாரம் முழுவதும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இன்று திங்கட்கிழமை முதல் பள்ளிகள் துவங்கும் என்று முன்பு அறிவிப்பு செய்யப்பட்டிருந்தாலும், நேற்று மாலை மாவட்ட கல்வி இயக்கம் திங்கட் கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை தொடரும் என்று அறிவிப்பு செய்துள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியாமல் நிவாரணப் பணிகள் தொடர்வதால் இந்த விடுமுறை நாளையும் தொடர வாய்ப்பு உள்ளது.
மேலும் வாசிக்க>>>> "வடிந்தது மழை நீர்! பரவுமா விஷக்காய்ச்சல்?"

இது பரங்கிப்பேட்டை பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் பேரூராட்சி மன்ற தலைவர் முஹமது யூனுஸ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'இது குறித்து எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை. பரங்கிப்பேட்டை பகுதி முழுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ குழுவும் களத்தில் உள்ளது. எனவே இறையருளால் நமதூர் பகுதியில் நோய் பரவும் ஆபத்து எதுவுமில்லை' என்றார் உறுதியாக.
பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்கிறது.
தொடர் மழை காரணமாக கடந்த வாரம் முழுவதும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இன்று திங்கட்கிழமை முதல் பள்ளிகள் துவங்கும் என்று முன்பு அறிவிப்பு செய்யப்பட்டிருந்தாலும், நேற்று மாலை மாவட்ட கல்வி இயக்கம் திங்கட் கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை தொடரும் என்று அறிவிப்பு செய்துள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியாமல் நிவாரணப் பணிகள் தொடர்வதால் இந்த விடுமுறை நாளையும் தொடர வாய்ப்பு உள்ளது.