
மாறிவரும் வானிலை பரங்கிப்பேட்டையில் குளுமையை ஏற்படுத்த, ரியாதிலோ கடும் மணற்புயல். வாகனத்தில் செல்பவர்களுக்கு எதிரே உள்ளது/வருவது தெரியாத அளவுக்கு
கடும் மணற்காற்று வீசுகிறது.
வெளியே தலைகாட்ட முடியவில்லை.
சில நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. சாலைகளில் தத்தம் முகப்பு விளக்குகளின் ஒளிரும் வெளிச்சநம்பிக்கைகளைப் பற்றி நகரும் வாகனங்களுக்கு எறும்பினும் சற்றே வேகம் அதிகம்.
சில, பல விமான சேவைகளும் விலக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த மணற்புயலைப் போல கடந்த வருடங்களில் கண்டதில்லை என்று ரியாத் வாழ் தமிழர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.




























