வியாழன், 5 பிப்ரவரி, 2009

துண்டு பிரசுரங்களுக்கு அனுமதி!


பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தேர்தலில் போட்டியிடுபவர்கள், வாக்கு சேகரிப்பதற்கு மற்றும் பிரச்சாரம் செய்வதற்கு துண்டு பிரசுரங்களை வெளியிடக்கூடாது என்று தேர்தல் குழு நிபந்தனை விதித்தது. ஆனால் இதை எதிர்த்து டாக்டர் நூர் முஹம்மது தேர்தல் குழுவிடம் முறையிட்டு, இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் நீதிமன்றத்தில் சந்திப்பேன் எனவும் கூறியிருந்தார்.

இதை பரிசீலனை செய்த தேர்தல் குழு, வேட்பாளர்கள் தங்களை பற்றிய சுய பிரச்சாரம் செய்வதற்கு துண்டு பிரசுரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்து, இன்று இதை அறிவித்துள்ளது.

3 கருத்துகள்:

  1. துவக்கமே நீதி மண்றம் என்ற மிரட்டலுடன் இருக்கிறதே..... அப்போ நாமும் நம் பிரச்சனைகளை நீதி மண்றதிலேயே பார்த்துக்கலாமே.... ஏன் இந்த நேர விரயம்???

    தாரிக்

    பதிலளிநீக்கு
  2. வேட்பாளரின் கோடிக்கையை ஏற்று துண்டு பிரசுரங்களுக்கு அனுமதி அளித்த தேர்தல் குழு, இதேப்போன்று வெளிநாட்டில் வசிக்கும் பரங்கிப்பேட்டையைச்சார்ந்த முஸ்லிம்களுக்கும் ஓட்டுரிமையை வழங்கி அனைவரிடத்திலும் "சபாஷ்" வாங்களாமே..

    பதிலளிநீக்கு
  3. அஸ்லாமு அலைக்கும்,

    டாக்டர் நூர் முஹம்மது நீதிமன்றத்தில் சந்திப்பேன் தானே கூறியிருந்தார்???

    தேர்தல் குழு மட்டும் தேர்தலில் வெளிநாட்டுவாழ் பரங்கிப்பேட்டையர்களுக்கு ஓட்டு போடும் உரிமையை மறுத்துவிட்ட தேர்தல் குழு, இது //இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு// எதிரானது என்கிற காரணத்தையும் சொல்லியிருக்கிறது????

    அப்துல் ரஹ்மான்,
    பரங்கிப்பேட்டை.

    பதிலளிநீக்கு