பள்ளி இறுதி தேர்வு முடிவுகள் வெளியான உடன் கல்வித்தகுதியை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மாணவர்கள் கூட்டம் அலைமோதும்.
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் போதிய இடவசதி இல்லாத நிலையில் திருமண மண்டபம், பள்ளிகளில் சிறப்பு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டு வந்தது.
நெரிசல், காலதாமதத்தை தவிர்க்க இந்தாண்டு அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வு முடித்த மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு அலுவலக பதிவு நடவடிக்கையை மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி வேலை வாய்ப்பு பதிவிற்கான படிவத்தை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து தலைமை ஆசிரியர்கள் பெற்று வர வேண்டும்.
படிவங்களை மாணவர்களுக்கு கொடுத்து, பூர்த்தி செய்த படிவத்துடன் அவர்களது ரேஷன் கார்டு நகல், மார்க் சீட் நகலை இணைத்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்களின் கல்வித்தகுதியை பதிவு செய்து, பதிவு எண் அட்டைகள் வழங்கப்பட்டதும் அவற்றை உரிய மாணவர்களிடம் தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும்.
இதற்காக தனியாக பதிவேடு துவங்கி பராமரிக்க வேண்டும். இந்த பணிகளை செய்ய 10ம் வகுப்புக்கு ஒருவர், 12ம் வகுப்புக்கு ஒருவர் என இரண்டு பொறுப்பு ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக