12-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூலை 3 முதல் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இப்புத்தகக் கண்காட்சிக் குழு நடத்தும் குறும்படப் போட்டிக்கான குறும்படங்கள் கீழ்க்காணும் விதிகளுக்கு உட்பட்டு வரவேற்கப்படுகின்றன.
குறும்படங்கள், தமிழின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச்சிக்கல்கள், சமூக உணர்வுகள் போன்றவற்றை பிரதிபலிப்பவையாக இருக்கவேண்டும்.
டிவிடி அல்லது விசிடி-ல் 30 மணித்துளிகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரமும், ஏற்கெனவே பரிசு பெற்றிருந்தால் அவற்றின் விவரமும் இணைத்து அனுப்புதல் வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்வதற்கான ஒப்புதல் கடிதம் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
குறும்படங்கள் புத்தகக் கண்காட்சியின் போது திரையிடப்படும்.
குறும்படங்கள் 01-01-07-க்குப் பிறகு எடுக்கப்பட்டதாக இருப்பதோடு, போட்டிக்குக் குறும்படங்கள் இம்மாதம் 15-ம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும்.
ஆவணப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
குறும்படத்தின் கதைச்சுருக்கம், முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் வரவேற்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக