செவ்வாய், 23 ஜூன், 2009

அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

பரங்கிப்பேட்டை:

வேளங்கிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவர் அமைத்திட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை ஒன்றியம் வேளங்கிப்பட்டு கிராம மக்கள் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

வேளங்கிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பூவாலை, சேந்திரக் கிள்ளை, அலமேலு மங்காபுரம், வில்லியநல்லூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகள் இருந்தும், சுற்று சுவர் இல்லாததால் ஆடு, மாடுகள் உள்ளே புகுந்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகின்றன.

பள்ளியை சுற்றி உள்ள புதர்களில் இருந்து விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மாணவர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

எனவே பள்ளிக்கு சுற்றுச் சுவர் அமைத்து தர வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக