
ஜமாஅத் தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மதரஸா நிர்வாகி கலிமா கே. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் முன்னிலை வகித்தார்
மதரஸா பேராசிரியர் எஸ். முஜிபுர் ரஹ்மான் ரஷாதி கிராஅத் ஓதினார்.
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் ஹழ்ரத், லால்பேட்டை மன்பவுல் அன்வார் மதரஸா முதல்வர் ஏ.நூருல் அமீன் ஹழ்ரத் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
சென்னை காஷிஃபுல் ஹுதா மதரஸா முதல்வர் கே. முஹம்மது யஃகூப் ஹழ்ரத் ஹாஃபிழ் மாணவர்களுக்கு பட்டம் (ஸனது) வழங்கி துஆ செய்தார்கள்.
ஐந்து மாணவர்கள் பட்டம் பெற்றார்கள்.
மதரஸா நிர்வாகி ஏ. முஹம்மது ஆரிஃப் ஆண்டறிக்கை வாசித்தார். (இணைப்பை பார்வையிடுக).
இவ்விழாவில் சென்னை, லால்பேட்டை, சிதம்பரம் மதரஸா பேராசிரியர்கள், பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பரங்கிப்பேட்டை நகர ஆலிம்கள், பள்ளிவாசல் இமாம்கள், முத்தவல்லிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக