பட்டமளிப்பு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பட்டமளிப்பு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

தெளலதுன்னிசா மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா

பரங்கிப்பேட்டை தெளலதுன்னிசா மகளிர் அரபிக்கல்லூரி 2-வது ஆண்டு முபல்லிகா பட்டமளிப்பு விழா இறைவன் நாடினால் வருகின்ற 07-08-2009 வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைப்பெற இருக்கின்றது. இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவரும், பேரூராட்சி மன்ற தலைவருமாகிய முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைப்பெறும் இந்த விழாவில் மீராப்பள்ளி முத்தவல்லி அப்துல் சமது ரஷாதி கிராஅத் ஓதுகிறார், தெளலத்துன்னிசா மகளிர் அரபிக்கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் மரைக்காயர் உமரி வரவேற்புரையாற்றுகின்றார். மீராப்பள்ளி நிர்வாகி ஷேக் அப்துல் காதர் மரைக்காயர், சிங்கப்பூர் தொழிலதிபர் அப்துல் ஜலீல், அல்ஹாஸ் அறக்கட்டளை தலைவர் ஷேக் அலாவுதீன், நிர்வாகி காதர் ஹஸனா மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் துணை முதல்வர், ரூஹூல் ஹக் பாகவி ரஷாதி, பரங்கிப்பேட்டை அல்ஹஸனாத் பெண்கள் அரபிக்கல்லூரி முதல்வர் அப்துல் காதர் மதனி ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர். விழாவில் தமிழ்நாடு வஃக்ப் வாரிய தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான், இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் ஹிதாயத்துல்லாஹ், ரேடியன்ட் I.A.S அகடாமி கள்ளக்குறிச்சி இயக்குநர் ரஹ்மத்துல்லாஹ், லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் முதல்வர் நூருல் அமீன் ஹஜ்ரத், சிதம்பரம் அல்மதரஸதுல் ஆலியா தலைவர் இஸ்மாயில் நாஜி, நகர ஜமாஅத்துல் உலமா பேரவை தலைவர் காஜா முயினுதீன் மிஸ்பாஹி, அல்மதரஸதுல் மஹ்மூதியா முதல்வர் சித்திக் அலி பாகவீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

பட்டமளிப்பு விழாவினையொட்டி பெண்களுக்காக கிராஅத் போட்டி, பட்டம் பெறும் மாணவிகளின் மார்க்க சொற்பொழிவு ஆகியவை பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைப்பெறுகிறது. கடந்த ஆண்டு உள்ளுர் மாணவிகள் 8 பேர் மட்டுமே முபல்லிகா பட்டம் பெற்றனர், இந்த ஆண்டு பட்டம் பெறும் உள்ளூர் மாணவிகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை அல்ஹாஸ் அறக்கட்டளை செயலாளர் செய்யது ஆரிப் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

ஞாயிறு, 26 ஜூலை, 2009

அல்-மதரஸத்துல் மஹ்மூதிய்யா அரபிக்கல்லூரி ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா!

பரங்கிப்பேட்டை மாநகரில் சுமார் 35 ஆண்டுகளாக செயல்படும் அல்-மதரஸத்துல் மஹ்மூதிய்யா அரபிக்கல்லூரியின் 3வது ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை (24.07.2009) அன்று மீராப்பள்ளி, மதரஸா வளாகத்தில்

நடைபெற்றது.

ஜமாஅத் தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மதரஸா நிர்வாகி கலிமா கே. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் முன்னிலை வகித்தார்

மதரஸா பேராசிரியர் எஸ். முஜிபுர் ரஹ்மான் ரஷாதி கிராஅத் ஓதினார்.

மதரஸா முதல்வர் ஏ.சித்தீக் அலீ பாகவீ வரவேற்புரையாற்றினார்.

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் ஹழ்ரத், லால்பேட்டை மன்பவுல் அன்வார் மதரஸா முதல்வர் ஏ.நூருல் அமீன் ஹழ்ரத் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

சென்னை காஷிஃபுல் ஹுதா மதரஸா முதல்வர் கே. முஹம்மது யஃகூப் ஹழ்ரத் ஹாஃபிழ் மாணவர்களுக்கு பட்டம் (ஸனது) வழங்கி துஆ செய்தார்கள்.

ஐந்து மாணவர்கள் பட்டம் பெற்றார்கள்.

மதரஸா நிர்வாகி ஏ. முஹம்மது ஆரிஃப் ஆண்டறிக்கை வாசித்தார். (இணைப்பை பார்வையிடுக).

மற்றொரு நிர்வாகி ஏ. பஷீர் அஹ்மத் நன்றியுரையாற்றினார்.

இவ்விழாவில் சென்னை, லால்பேட்டை, சிதம்பரம் மதரஸா பேராசிரியர்கள், பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பரங்கிப்பேட்டை நகர ஆலிம்கள், பள்ளிவாசல் இமாம்கள், முத்தவல்லிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.















வியாழன், 28 மே, 2009

அல்ஹஸனாத் இஸ்லாமிய கல்லூரியின் பட்டமளிப்பு விழா

27-05-2009 அன்று, பரங்கிப்பேட்டையில் பெண்களுக்காக நடத்தப்பட்டு வரும் "அல்ஹஸனாத் இஸ்லாமிய கல்லூரி"யின் ஒன்பதாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவும், கோடைக்கால தீனியாத் வகுப்புகளுக்கான பரிசளிப்பு விழாவும் கல்லூரியில் நடைப்பெற்றது.

இஸ்லாமிய ஐக்கியஜமாஅத் தலைவர் மதிப்பிற்குரிய யூனுஸ் நானா அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், மீராப்பள்ளி முத்தவல்லி மதிப்பிற்குரிய நவாப்ஜான் நானா அவர்கள் பட்டம் மற்றும் பரிசுகளை வழங்கி மாணவிகளை ஊக்குவித்தார்கள்.

கல்லூரி முதல்வர் சகோதரர் அப்துல் காதர் மதனி, சகோதரர் தவ்லத் அலி, சகோதரர் பைஸல் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்: கு. நிஜாம்