
இளம்பிள்ளைவாதம் எனும் கொடுமையான நோயை ஒழித்து கட்ட அரசாங்கம் அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. வருடம் தோறும் இரண்டு நாட்கள் போலியோ தடுப்பு சொட்டு மருந்துகளை இலவசமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அளித்து வருகிறது. இன்று அந்த நாள். நமதூரில் பல இடங்களில் இதற்கென தற்காலிக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.