ஞாயிறு, 27 ஏப்ரல், 2008

சமுதாயம் செழிப்புற பிரார்த்திப்போம்


பரங்கிமாநகரின் கல்வி வளர்ச்சிக்கு சீரிய பங்களித்து வரும் கல்விக்குழு இந்த கோடையில், வருங்கால சந்ததியினருக்கு புத்தகங்கள் எனும் மதிப்புமிக்க பொக்கிஷத்தின் பரிச்சயத்தை ஏற்படுத்தும் நோக்கில் இஸ்லாமிய கல்வி வளர்ச்சி மையத்துடன் இணைந்து இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய புத்தக மற்றும் சி.டி/ டி.வி.டி கண்காட்சி (மற்றும் விற்பனை) ஒன்றினை வருகின்ற மே 1 முதல் 4 தேதி வரை மீராப்பள்ளித்தெரு, மஹ்மூதியா ஓரியண்டல் பள்ளியில் நடத்த உள்ளது. (பார்வையிடவும் : இணைக்கப்பட்டுள்ள நோட்டிஸ்)


மேலும் கல்விக்குழுவின் சென்றவருட செயல்திட்டத்தினடிப்படையில், இன்ஷா அல்லாஹ் அனைத்து மாணவ, மாணவியருக்கும் (குறிப்பாக 8 முதல் 12 வகுப்பு) கல்வி மாநாடு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி மே மாதம் 10ம் தேதி சனிக்கிழமை காலை 9 முதல் மதியம் 12.30 வரை மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடத்த உள்ளது. சகோதரர். சி.எம்.என். சலீம் அவர்களின் மதிப்புமிக்க உரையோடு, கடந்த கல்வியாண்டுகளில் பள்ளி முதல் மதிப்பெண்கள் பெற்று சாதித்த மாணவமாணவியரின் மேடை கருத்துப்பகிர்வுகளும் இடம் பெறுகிறது. மாணவர்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பு பற்றியும் கருத்துக்கள் வலுவாக பதியப்படும்.


இது தவிர, இந்த கோடைவிடுமுறையினை சிறார்கள் பயனுள்ள வகையில் கழித்திட பல்திறன் போட்டிகள (விளயாட்டு, ஆளுமைத்திறன் கல்வி உள்ளிட்டவை) நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.


இந்நிகழ்ச்சிகளின் நோக்கம் முழுஅளவில் எட்டப்படுவதற்காக தங்களின் மதிப்புமிக்க பிரார்த்தனைகளயும், இந்நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்து கொண்டு பயனடையவும் கல்விக்குழு அன்புடன் கோருகிறது. நல்லவை தொடர்ந்து நடந்து சமுதாயம் செழிப்புற பிரார்த்திப்போம்.

சனி, 26 ஏப்ரல், 2008

மீண்டும் மீராப்பள்ளி...

ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியின் முன்புற வளாகத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் இவ்வேளயில், பள்ளியின் இடதுமுன்புறம் அமைந்துள்ள கபர் ஒன்று தரைமட்டத்திற்கு கீழேயும், குப்பைகள் மற்றும் கழிவுகளுக்கு மத்தியில் இருந்ததால், குப்பைகள் சேர்வதை தடுக்கும் முயற்சியாக பள்ளி நிர்வாகம் அந்த பகுதியை சீரமைக்க முடிவு செய்தது. இப்பணி நடந்துகொண்டிருக்கும் வேளயில் சில தனிப்பட்ட நபர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த கப்ர் சற்று உயர்த்தி கட்டப்பட்டது. அதே சமயம், மீராப்பள்ளி நிர்வாகத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத சிலநபர்கள் குழப்பம் விளவிக்கும் நோக்கோடு அந்த கபரை செம்மைப்படுத்தி அனாச்சாரங்களுக்கு அதனை பயன்படுத்த எண்ணி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். இதனையறிந்த இளஞர்கள் மற்றும் பொதுமக்கள் பரவலான எண்ணிக்கையில் ளுஹர் தொழுகைக்கு பிறகு கூடி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். அப்போது சிறிது பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து இந்த பிரச்சனை ஐக்கிய ஜமாஅத்தின் பார்வைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. மஃக்ரிபுக்கு பிறகு நிர்வாகமும், பொதுமக்களும் அமைதியான முறையில் ஜமாஅத்தில் அமர்ந்து பேசி மேலும் இப்பிரச்சனை தொடராமலிருக்க, புதுப்பிக்கப்பட்ட கப்ர் அமைப்பு இதன் பிறகு எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும், அதனருகில், எந்தவிதமான வழிபாடு சார்ந்த அனாச்சாரங்களும் எக்காலத்திலும் நடைபெற மீராப்பள்ளி நிர்வாகம் கண்டிப்பாக அனுமதிக்காது என்றும் நிர்வாகத்தாலும், ஜமாஅத்தாலும் உறுதிமொழி வழங்கப்பட்டது.

செவ்வாய், 22 ஏப்ரல், 2008

நர்கிஸ்-மல்லாரி பதிப்பகம் நடத்தும் இலக்கிய போட்டிகள்.

பிரபல முன்னோடி எழுத்தாளர் ஹிமானா சையத் அவர்களிடமிருந்து வந்த மின்மடல்:

நர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம்
நாவல் -கட்டுரைப் போட்டிகள்

நர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம் இணைந்து நடத்தும்
"முகம்மது இஸ்மாயில் -இபுறாஹீம் பீவி நினைவு"
நாவல் -கட்டுரைப் போட்டிகள்

கட்டுரைத்தலைப்பு
"இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம்"
முதல் பரிசு: ரூபாய் 5000/-
இரண்டாம் பரிசு: 3000/-
மூன்றாம் பரிசு: 2000/
5 ஆறுதல் பரிசுகள்: 1000/-

விதிகள்
1.கட்டுரை 12 முதல் 15 அத்தியாயங்களைக் கொண்டதாக அமையவேண்டும்.
2. ஒவ்வொரு அத்தியாயமும் வெள்¨ளை முழுத்தாள் அளவில் (A-4) கையெழுத்தில்4 - 6 பக்கம் அச்சில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்
3. குர்ஆன், ஹதீஸ், நூல் மேற்கோள்கள் பயன்படுத்தும் போது சரியானஆதாரங்கள் தரப்பட வேண்டும்.

நாவல்
முதல் பரிசு: ரூபாய் 5000/-
இரண்டாம் பரிசு: 3000/-
மூன்றாம் பரிசு: 2000/
5 ஆறுதல் பரிசுகள் : 1000/-

விதிகள்
1.இஸ்லாமிய விழுமியங்கள், கலாசாரம், சமூக ஒற்றுமை, மனிதநேயம்,நாட்டுப்பற்று மேவும் முஸ்லிம் வாழ்வியலை மையமாக வைத்து எழுதப்படும் சமகால சமூக நாவலாயிருக்கவேண்டும். வரலாற்று நாவல்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
2. அத்தியாயங்கள் 15 முதல் 18 -க்கு மிகாமல் இருக்கவேண்டும்.
3. ஒரு அத்தியாயம் வெள்¨ளை முழுத்தாள் அளவில் (A-4) கையெழுத்தில் 6 - 8பக்கம் அச்சில் 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

பொது விதிகள்
1.போட்டிகளில் பங்கு பெறுவோர் தனித்தாளில் தங்களது சரியானபெயர்/தகப்பனார்/கணவர் பெயர்கள் /கல்வித்தகுதி/ முகவரி/ தொலைபேசி எண்கள்/ஈமெயில் இவற்றுடன் ஆக்கம் தங்களுக்குச் சொந்தமானதென்றும், தழுவலோ அல்லதுமொழிபெயர்ப்போ அல்லவென்றும், போட்டி விதிகளுக்குக் கட்டுப்படுவதாகவும்உறுதிமொழி அளித்து கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்
2. ஒரு பக்கம் மட்டுமே எழுத / டைப் செய்ய வேண்டும்
3. ஆக்கங்களை தபாலிலோ / கூரியர் சர்வீஸிலோ அனுபலாம். ஆக்கங்கள் கிடைத்தஒரு வாரத்துக்குள் பெற்றுக்கொண்டதற்கான தகவல் அனுப்பப்படும். அதன் பிறகுஅது சம்பந்தமாக அனைத்து கடித/ ஈமெயில்/ தொலைபேசித் தொடர்புகள் தவிர்க்கப்பட வேண்டும்.
4. நர்கிஸ் - மல்லாரி பதிப்பகம் நியமிக்கும் நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.
5. ஆக்கங்கள் ஜூலை மாதம் 31 -ம் தேதிக்குள் கிடைக்கவேண்டும்
6. ஆக்கங்களைத் திருப்பி அனுப்ப இயலாது. தபால் தலைகள் அனுப்ப வேண்டாம்.
7.பரிசு பெறும் நாவல்கள்/ கட்டுரைகள் முழுமையாகவோ/ பகுதியாகவோ நர்கிஸில்தொடர் கதைகளாக/ கட்டுரைகளாக வெளிவரும்; அவற்றை நர்கிஸில் வெளிவரும் வரைவேறு வகையில் பிரசுரிக்கக் கூடாது.
8.பரிசீலனை முடிந்த பிறகு நர்கிஸ் இதழில் முடிவு அறிவிக்கப்படும்;அதைத்தொடர்ந்து பரிசுபெற்றவர்களுக்கும் பதிவுத் தபால் / கூரியர் சர்வீஸ்மூலம் தெரிவிக்கப்படும். அதனுடன் பரிசுத்தொகையும் காசோலை மூலம்அனுப்பிவைக்கப்படும்.
9.கட்டுரைகள்/ நாவல்கள் நர்கிஸ் முகவரிக்கு ( 54, மரியம் நகர்,மல்லிகைபுரம், திருச்சி- 620001, தமிழ்நாடு, இந்தியா) அனுப்பப் படவேண்டும் ; கடித உறையின்மீது கட்டுரை/ நாவல் என்று தெளிவாகக்குறிப்பிடவேண்டும்
10.ஒருவரே இரண்டு போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்; ஒன்றுக்கு மேற்பட்டஆக்கங்களையும் அனுப்பலாம்.
எம். அனீஸ் பாத்திமா
பதிப்பாளர்/நிர்வாக ஆசிரியை
நர்கிஸ்
திருச்சி -620001

டாக்டர் அ. சையத் இப்ராஹீம் (ஹிமானா சையத்)
கௌரவ ஆசிரியர் : நர்கிஸ்
நிறுவனர்:மல்லாரி பதிப்பகம்
சித்தார்கோட்டை-623513

நமதூர் எழுத்தாளர்களே.., இவ்வாய்ப்பினை நன்றாகப் பயன்படுத்திக்கொள்வீர்களாக.