வெள்ளி, 13 மார்ச், 2009

உலக மகளிர் தினச்செய்திகள்

# உலகில் உள்ள அகதிகளில் என்பது சதவிகிதத்தினர் பெண்களும் குழந்தைகளுமே (ஐ. நா. மனித உரிமை அறிக்கை 2001)

# 1994 இல் ருவாண்டாவில் நடந்த இனக்கலவரத்தில் பாலியல் பலாத்க்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஐந்து லட்சம். (செஞ்சிலுவை சங்க அறிக்கை 2002)
# இராக்கில் பாக்தாத் நகரத்தில் மட்டும் ஏப்ரல் 2003 வரை கற்பழிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 400 க்கும் மேல். (மனித உரிமை கண்காணிப்பின் சர்வே 2003)
# கொசாவாவில் சில கிராமங்களில் செர்பிய ராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட பெண்களில் 30 சதவிகிதத்தினர் கர்ப்பிணிகள். (அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கை 1999).
இன்னும் தொடர்கிறது பட்டியல். இந்த புள்ளி விவரங்களில் பெண்கள் வெறுமனே எண்களாக சுருங்கிவிடும் நிலையில், மகளிர் தினம் கொண்டாட மனம் வருமா என்ன?
நன்றி : நானே கேள்வி நானே பதில்., ஆனந்த விகடன் 18.03.2009.

வியாழன், 12 மார்ச், 2009

சாலைப் பணி விரைவாக முடிந்தது

MYPNO செய்தி எதிரொலி: சாலைப் பணி விரைவாக முடிந்தது

நகுதா மரைக்காயர் தெருவில் சிமெண்ட் சாலை போடும் பணயில் இருந்த தொய்வு குறித்து தொங்கும் சாலைகள் என்ற தலைப்பில் பிப்ரவரி 20 அன்று செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த செய்தி எதிரொலியாக இந்த சாலைப் பணி விரைந்து முடிக்கப்ட்டுள்ளது.

இது குறித்து அங்கு பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, இந்த செய்தி இண்டெர்நெட்டில் வெளிவந்துள்ளது என்று சிலர் கூறினார்கள். ஆனால் இதை நாங்கள் வேண்டுமென்று செய்வதில்லை. போதிய ஆட்கள் வேலைக்கு கிடைக்ககாததினாலேயே சில சிரமங்கள் ஏற்படுகிறது. அந்த சிரமங்களை தாண்டியும் நாங்கள் இதில் அக்கரை எடுத்து இப்பணியை விரைந்து முடித்திருக்கிறோம் என்றார்.

திடீர் மழை : 40 செம்மறி ஆடுகள் பலி

புதுச்சத்திரம் அருகே திடீர் மழையால் 40 செம்மறி ஆடுகள் இறந்தன. கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர்காட்டுச்சாகை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர், 300க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். மேய்ச்சலுக்காக புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு கிராம வயல் வெளியில் செம்மறி ஆடுகளை தங்க வைத்து, மேய்த்து வந்தார். நேற்று முன்தினம் பெய்த திடீர் மழையில், செம்மறி ஆடுகள் மழையில் நனைந்தன.

நேற்று காலை திடீரென 40க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் இறந்தன. இதனால் பெரியப்பட்டு கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பெரியப்பட்டு ஊராட்சி தலைவர் கஸ்தூரி பரங்கிப்பேட்டை கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்தார். கால்நடை டாக்டர் சங்கர் நேரில் சென்று பார்வையிட்டார். திடீர் மழை காரணமாக உஷ்ணம் அதிகரித்தும், குளிர் தாங்கமுடியாமலும் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆடுகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் ஆடுகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர் 12-03-2009