செவ்வாய், 16 ஜூன், 2009

பரங்கிப்பேட்டை உட்பட கடலூர் மாவட்டத்தில் 17 எஸ்.ஐ.,க்கள் இட மாற்றம்

பரங்கிப்பேட்டை உட்பட கடலூர் மாவட்டத்தில் 17 சப் இன்ஸ்பெக்டர்கள், 37 போலீசாருக்கு இட மாறுதல் அளித்து எஸ்.பி., பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 9ம் தேதி ௩௬௫ போலீசாருக்கு பொது பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் 37 போலீசாருக்கும் 17 சப் இன்ஸ்பெக்டர்களுக்கும் மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இட மாறுதல் பெற்றுள்ள சப் இன்ஸ்பெக்டர்கள் விவரம் வருமாறு:

  1. குமராட்சியில் பணியாற்றிய (கிரைம்) கருணாநிதி சிதம்பரம் தனிப் பிரிவிற்கும்,
  2. சிதம்பரம் (தனிப் பிரிவு) சிங்காரவேலு ரெட்டிச்சாவடிக்கும்,
  3. மனித உரிமை மற்றும் சமூக நீதி பிரிவு ஆசைத்தம்பி சோழத்தரத்திற்கும்,
  4. சோழத்தரம் மணிவாசகம் சிதம்பரம் தாலுகாவிற்கும் (குற்றப் பிரிவு),
  5. ரெட்டிச்சாவடி மதிவாணன் சிதம்பரம் டவுனுக்கும் (சட்டம் ஒழுங்கு),
  6. ரெட்டிச்சாவடி தீபா மனித உரிமை மற்றும் சமூக நீதி பிரிவிற்கும்,
  7. பரங்கிப்பேட்டை கவிதா கடலூர் துறைமுகத்திற்கும் (மகளிர் பிரிவு),
  8. கடலூர் துறைமுகம் மகேஸ்வரி பரங்கிப்பேட்டைக்கும்,
  9. சிதம்பரம் டவுன் சேக்கிழார் கடலூர் துறைமுகத்திற்கும்,
  10. சிதம்பரம் தாலுகா (ஓ.டி., சிறைத் துறை) அரங்கநாதன் காட்டுமன்னார்கோவிலுக்கும் (கிரைம்),
  11. கடலூர் (கட்டுப்பாட்டு அறை) சண்முகம் தனிப்பிரிவு தலைமையிடத்திற்கும்,
  12. கடலூர் தனிப்பிரிவு தலைமையிடம் ரத்தினவேல் புதுப்பேட்டைக்கும் (ஓ.டி., தனிப் பிரிவு கடலூர்),
  13. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய கிருஷ்ணவேணி சிதம்பரத்திற்கும்,
  14. சிதம்பரம் கலாவதி கடலூருக்கும்,
  15. கடலூர் புதுநகர் வசந்தகுமாரி சிதம்பரத்திற்கும்,
  16. சிதம்பரம் சித்ரா கடலூருக்கும்,
  17. புதுச்சத்திரம் குணசேகரன் மாவட்ட குற்றப் பிரிவிற்கும்

இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை எஸ்.பி,. பிரதீப்குமார் பிறப்பித்துள்ளார்.

Source: தினமலர்

திங்கள், 15 ஜூன், 2009

பரங்கிப்பேட்டையில் போலீஸ் பற்றாக்குறை

பரங்கிப்பேட்டையில் போலீஸ் பற்றாக்குறையால் குற்றங்களை தடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை போலீஸ் சரகத்தில் உள்ள 36 கிராமங்களில் தினந்தோறும் அடிதடி தகராறு, விபத்துகள், தற்கொலை சம்பவங்கள் நடக்கிறது.

சமீப காலமாக திருட்டு, கொள்ளை சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

பரங்கிப்பேட்டை ஸ்டேஷனில் குறைவான அளவில் போலீசார் உள்ளதால் தினமும் வரும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

ஒரு இன்ஸ்பெக்டர், 4 சப் இன்ஸ்பெக்டர்கள், 8 ஏட்டுகள், 6 போலீசார் உள்ளனர்.

இவர்களில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் கடலூர் போலீஸ் பயிற்சி பள்ளிக்கும், மூன்று ஏட்டுகள் சிதம்பரம் டிராபிக், செக்போஸ்ட், ஒரு ஏட்டு ஏ.எஸ்.பி., அதிவிரைவுப்படை, ஒரு போலீஸ்காரர் கடலூர் சி.ஆர்.பி., டிரைவர், கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் என பல பணிகளுக்கு சென்றுவிடுகின்றனர்.

இது போக சிலை பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு என பணி சுமைகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இவை போக ஐந்து போலீசாரே பணியில் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனால் தொடரும் திருட்டு சம்பவங்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்: முதல்வர் அமைச்சர் பன்னீர் செல்வம் பேச்சு

பரங்கிப்பேட்டை: பல்வேறு சாதனைகள் செய்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை முதல்வர் கருணாநிதி பிடித்துள்ளார் என சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.

பரங்கிப்பேட்டை அடுத்த சின்னகுமட்டியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார்.

இதில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பன்னீர் செல்வம் பேசியதாவது:

தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி தந்துள்ளார்.

இதனால் ஏழை, எளிய மக்கள், பள்ளி மாணவர்கள், விவசாயிகள், கர்ப்பிணி பெண்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் 628 பயனாளிகளுக்கு இலவச கலர் டிவி, 20 பயனாளிகளுக்கு மனைப்பட்டா, 27 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஜெ., ஆட்சி செய்த பத்து ஆண்டுகளில் அதிகாரிகளை தேடி அலைந்தும் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

முதல்வர் கருணாநிதி ஆட்சியில் மக்களை தேடி அதிகாரிகள் வந்து பல திட்டங்களை நிறைவேற்றி தருகின்றனர்.

கிராம சாலைகள் தற்போது தார்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது.

அனைத்து கிராமங்களிலும் இரவு நேரங்களில் நெய்வேலி போல் விளக்கு வெளிச்சம் பிரகாசமாக உள்ளது.

அனைத்து இடங்களிலும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மக்களுக்காக பல திட்டங்கள் நிறைவேற்றுபட்டு வருவதால் முதல்வர் கருணாநிதி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

அதற்கு நன்றி கடன்பட்டவர்களாக நீங்கள் செயல்பட வேண்டும்.

நூறு நாள் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதால் வயதானவர்களுக்குகூட சம்பளம் கிடைக்கிறது.

தற்போது 80 ரூபாய் வழங்கப்பட்ட சம்பளம் நூறு ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.