தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம், வேலூர் ஆகிய இடங்களில் நேற்று சனிக்கிழமை 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் பதிவானது. அதன் விவரம் வருமாறு: வெப்பநிலை (ஃபாரன்ஹீட்டில்) சென்னை, பாளையங்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பரங்கிப்பேட்டை 104, சென்னை மீனம்பாக்கம், வேலூர் 108, காரைக்கால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருப்பத்தூர், புதுச்சேரி 102, கடலூர் 100. குறைந்தபட்சமாக உதகமண்டலம், கொடைக்கானல் ஆகிய ஊர்களில் 72 டிகிரி வெப்பம் பதிவானது என்று தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
ஞாயிறு, 8 மே, 2011
சனி, 7 மே, 2011
பரங்கிப்பேட்டையில் மாலை 4 -6 நல்ல நேரம்!
பரங்கிப்பேட்டை: கத்திரி வெயில் தொடங்கி வெப்பம் மண்டையை பிளக்கும் இந்த நாட்களில், தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு அதிகரித்துள்ளதால் ஒரு பக்கம் கடையடைப்பு, போராட்டம் என்று நடந்து கொண்டிருக்க பரங்கிப்பேட்டையிலோ மே மாதம் முதல் தேதியிலிருந்து மின்வெட்டே இல்லாத நிலை; 24 மணி நேரமும் தொடர் மின் வினியோகம் இருப்பதை எந்த அதிசயத்தில் சேர்ப்பது என்ற தெரியவில்லை.
ஒருவேளை பரங்கிப்பேட்டை மின்சார வாரியத்தின் கடுமையான அலட்சியப்போக்கினால் அறிவிக்கப்பட்ட தினசரி மின்வெட்டை மறந்து போய்விட்டார்கள் போலும் என்று விசாரித்தால் விசயமே வேறு.
ஏற்கனவே அறிவிக்கப்ட்டது போன்று, மே மாதம் தினசரி மின் நிறுத்த நேரமான மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் மின்சாரம் இதே நேரத்தில்தான் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி குடிநீர் தேக்கத் தொட்டிகளுக்கும் நீர் ஏற்ற இதே நேரத்தில் தான் மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே அறிவிக்கப்ட்டது போன்று, மே மாதம் தினசரி மின் நிறுத்த நேரமான மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் மின்சாரம் இதே நேரத்தில்தான் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி குடிநீர் தேக்கத் தொட்டிகளுக்கும் நீர் ஏற்ற இதே நேரத்தில் தான் மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, இந்த நேரத்தில் மின்நிறுத்தம் செய்வதில் பிரச்சினைகள் இருப்பதினாலும், அறிவிக்கப்பட்ட மின்வெட்டு நேரத்தை மாற்ற முடியாத காரணத்தினாலும் இந்த மாதம் முழுவதும் பரங்கிப்பேட்டையில் தடையற்ற மின்சார வினியோகம் இருக்கும்.
ஆனாலும், திருவாளர் பொதுஜனமோ ஏதோ நேத்து வரைக்கும் மறந்துட்டாங்க, இன்னைக்கு எப்படியும் எடுத்துடுவாங்க என்கிற நம்பிக்கையில் தினம் தினம் ஏமாற்றம் கலந்த ஆனந்தத்தில் மின்சார வாரியத்தின் கோடைகால பரிசை பெற்றுக் கொள்ள தவறவில்லை.
ஆனாலும், திருவாளர் பொதுஜனமோ ஏதோ நேத்து வரைக்கும் மறந்துட்டாங்க, இன்னைக்கு எப்படியும் எடுத்துடுவாங்க என்கிற நம்பிக்கையில் தினம் தினம் ஏமாற்றம் கலந்த ஆனந்தத்தில் மின்சார வாரியத்தின் கோடைகால பரிசை பெற்றுக் கொள்ள தவறவில்லை.
பரங்கிப்பேட்டையில் 102...!
தமிழகத்தில் 9 ஊர்களில் வெள்ளிக்கிழமை வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக திருத்தணியில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. கடந்த 4-ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. இதனால் மதிய வேளைகளில் சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் மக்கள் நடமாட்டம் குறையத் தொடங்கியுள்ளது.
வெப்பத்தை சமாளிக்க சாலையோர தர்பூசணி கடைகளையும், இளநீர் கடைகளையும் மக்கள் அதிக அளவு நாடி வருகிறார்கள். மாநிலத்தின் இதர முக்கிய இடங்களில் வெள்ளிக்கிழமை பதிவான வெப்பநிலை (டிகிரி ஃபாரன்ஹீட்டில்): திருநெல்வேலி, வேலூர் 105, சென்னை, நாகப்பட்டினம், காரைக்கால், பரங்கிப்பேட்டை 102, கடலூர், தஞ்சாவூர் 100, மதுரை, திருச்சி 99, கன்னியாகுமரி 97, தூத்துக்குடி, தருமபுரி 95. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வானம் சனிக்கிழமை பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகலில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரியாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்று தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...

