டில்லி சாகிப் தர்கா, கருணாநிதி சாலை, மூக்கணங்கயிறு, கவுஸ் பள்ளி போன்ற குடிசைப் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜமாஅத்தின் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
வியாழன், 2 டிசம்பர், 2010
தொடரும் மாமழை...
டில்லி சாகிப் தர்கா, கருணாநிதி சாலை, மூக்கணங்கயிறு, கவுஸ் பள்ளி போன்ற குடிசைப் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜமாஅத்தின் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
புதன், 1 டிசம்பர், 2010
பெய்தது பெருமழை..!
பொதுவாக மழைக்காலத்தில் வெள்ளம் தாழ்வான குடிசை பகுதிகளை நோக்கி பாய்வதும், சூழ்ந்து நின்று அழிவை தருவதுமே நாம் இதுவரை பார்த்து வந்த மழை., ஆனால் இந்த முறை அங்கிங்கெணாதபடி எங்கும் வெள்ளம் சூழ்ந்து நின்றது., மழைச்சேத நிவாரணப்பணிகளில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலகம் மிக பரப்பரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. மினி ஷாதி மஹாலில் சுமார் 2000 நபர்களுக்கு உணவு தயாரிக்கும் பணிக்காக ஜமாஅத் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து இருக்கிறது.
ஜமாஅத் - பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் , பேரூராட்சி மன்ற துனைத் தலைவர் செழியன் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் - கவுன்சிலர்கள் ஆகியோர் தில்லி சாஹிப் தர்கா மற்றும் ஏணைய பகுதிகளுக்கு வட்டாட்சியருடன் சென்று வெள்ளச் சேதப் பகுதிகளை பார்வையிட்டனர். பரங்கிப்பேட்டையின் மழைக்கால படங்கள் வாசக அன்பர்களின் பார்வைக்கு








திங்கள், 29 நவம்பர், 2010
இறப்புச் செய்தி
கவுஸ் பள்ளி தெருவில், மர்ஹூம் சாஹிப் மரைக்காயர் அவர்களின் மகனாரும், உஸ்மான் , ஹாஜா கமால், முஸ்தபா கமால், பஷீர் அஹமது ஆகியோர்களின் சகோதரரும், மர்ஹும் சையத் தாஜுதீன் சாஹிப், இப்ராஹிம் மரைக்காயர் அவர்களின் மைத்துனருமான ஜியாவுதீன் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்றிரவு 9 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...