புதன், 15 டிசம்பர், 2010

ஆசிரியர் நியமனம்: திருமா-விடம் இ.த.ஜ கோரிக்கை


பரங்கிப்பேட்டை கும்மத்துப்பள்ளி தெரு நடுநிலைப்பள்ளியில் சில பாடபிரிவுகளுக்கு எந்த ஆசிரியரும் இல்லை என்பதற்கும் ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர் நீண்ட விடுப்பில் சென்று இதுவரை பணிக்கு திரும்பாததற்கும் உடனே நடவடிக்கை எடுக்க கோரி பரங்கிப்பேட்டை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிதம்பரம் பாரளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இக்கோரிக்கையை பரங்கிப்பேட்டை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி நசுருத்தீன் பாரளுமன்ற உறுப்பினரிடம் வழங்கினார்.

செவ்வாய், 14 டிசம்பர், 2010

கடலூர் மாவட்ட ஜமாஅத் அலுவலக திறப்பு விழா

கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலக திறப்பு விழா நேற்று முன்தினம் கடலூர் செம்மண்டலத்தில் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில், மாவட்ட செயலாளர் கமாலுதீன், மற்றும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: P.I.Jகுழுமம்