திங்கள், 28 ஜனவரி, 2008
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்திற்கு நன்றி!
ஜனவரி 8, 2008 அன்று வலைப்பூவில் குறிப்பிட்டு எழுதியிருந்த 'நிறைய வசதிகளுடனும் நிறைவான கட்டிடங்களுடனும் பாதுகாப்பு சூழலற்ற அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி' என்கிற செய்தி இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டதின் விளைவாக, தற்போது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இது குறித்து ஜமாஅத் தனது முழுமுயற்சியுடன் அரசின் பார்வைக்கு எடுத்து சென்றும் இதற்கான நிதி ஒதுக்கும் ஆதாரம், திட்டம் எதுவும் இல்லாததினால் ஜமாஅத்தே இதை கையில் எடுத்து தற்போது தீர்வு கண்டுள்ளது. இதன்படி, பள்ளியின் உட்புறம் தெரியாதவாறு நுழைவு (கிரில்) கேட்டில்; அடைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான முழு செலவினை பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப் ஏற்றது. மேலும் பள்ளியின் வகுப்பறைகள் தெரியதாவறு தற்போதைய காம்பவுண்ட் சுவரினை உயரப்படுத்திதர சகோ. ஹபீபுர்ரஹ்மான் (ஹபீபிய்யா) ஒப்புக்கொண்டுள்ளார். இந்தப் பணி ஓரிரு நாட்களில் துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நற்பணிகளுக்காக முயற்சி எடுத்த ஜமாஅத்திற்கும், சகோ. ஹபீபுர்ரஹ்மானுக்கும், லயன்ஸ் கிளப்பிற்கும் பரங்கிப்பேட்டை மக்கள் சார்பாக இவ்வலைப்பூ நன்றிகளைத் தெரிவிக்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக