நன்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நன்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 ஜூலை, 2009

அதிரடி போஸ்டர்களும் குமுறல்களும்

பரங்கிப்பேட்டை:

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று முன் தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பரங்கிப்பேட்டை நகருக்கு வருகை புரிந்தார்.

இவருடைய திடீர் வருகையினால் செய்வதறியாது திகைத்து நின்ற நகர சிறுத்தைகள் அதிரடியாக நன்றி அறிவிப்பு போஸ்டர்களை வீதியெங்கும் சுவர்களில் ஒட்டினர்.

ஆனால் இது சிலருக்கு (வீட்டு உரிமையாளர்கள்) சற்று கோபத்தை வரவழைத்தது. தேர்தலின் போதுதான் அனுமதியின்றி எங்கள் வீட்டு சுவர்களை வீணாக்கி சென்றார்கள்.

இருந்தும் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்கிற பெயரில் காலம் கடந்து இப்போது அதிரடியாக எங்கள் வீட்டு சுவர்களை வீணாக்கி சென்றுள்ளனர் என்று குமுறினார் ஒரு இல்லத்தரசர்.

திங்கள், 28 ஜனவரி, 2008

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்திற்கு நன்றி!

ஜனவரி 8, 2008 அன்று வலைப்பூவில் குறிப்பிட்டு எழுதியிருந்த 'நிறைய வசதிகளுடனும் நிறைவான கட்டிடங்களுடனும் பாதுகாப்பு சூழலற்ற அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி' என்கிற செய்தி இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டதின் விளைவாக, தற்போது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இது குறித்து ஜமாஅத் தனது முழுமுயற்சியுடன் அரசின் பார்வைக்கு எடுத்து சென்றும் இதற்கான நிதி ஒதுக்கும் ஆதாரம், திட்டம் எதுவும் இல்லாததினால் ஜமாஅத்தே இதை கையில் எடுத்து தற்போது தீர்வு கண்டுள்ளது. இதன்படி, பள்ளியின் உட்புறம் தெரியாதவாறு நுழைவு (கிரில்) கேட்டில்; அடைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான முழு செலவினை பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப் ஏற்றது. மேலும் பள்ளியின் வகுப்பறைகள் தெரியதாவறு தற்போதைய காம்பவுண்ட் சுவரினை உயரப்படுத்திதர சகோ. ஹபீபுர்ரஹ்மான் (ஹபீபிய்யா) ஒப்புக்கொண்டுள்ளார். இந்தப் பணி ஓரிரு நாட்களில் துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நற்பணிகளுக்காக முயற்சி எடுத்த ஜமாஅத்திற்கும், சகோ. ஹபீபுர்ரஹ்மானுக்கும், லயன்ஸ் கிளப்பிற்கும் பரங்கிப்பேட்டை மக்கள் சார்பாக இவ்வலைப்பூ நன்றிகளைத் தெரிவிக்கிறது.