
இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் சிதம்பரத்தில் நேற்று மாலை கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் பரங்கிப்பேட்டையிலிருந்து 30-க்கும் மேற்பட்ட சகோதரர்களும், ஐக்கிய ஜமாஅத் மற்றும் கல்விக்குழு சார்பிலும் பலர் கலந்துக் கொண்டனர். விழா துவக்க உரையில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் எம். எஸ். முஹமது யூனுஸ் வாழ்த்துரையாற்றினார்.

பள்ளிவாசல்கள் தோரும் மழலையர் பள்ளிகளை துவங்க முன்வருவோர்க்கு நிதி உதவிகள் அளிக்க தயாராக இருப்பதாக இதயதுல்லாஹ் கூறினார். மேலும் இஸ்லாமிய சமூகம் பயன்பெற வேண்டிய அரசின் பல்வேறு திட்டங்களையும் உதவிகளையும் அவற்றை பெற வேண்டிய வழிமுறைகளையும் தெளிவாக எடுத்துரைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக