சமீபத்தில் பெய்த வரலாறு காணாத மழை சுற்றுப்புற புவியியலில் நிகழ்த்திவிட்ட பாதிப்புகள் இன்னமும் சரிசெய்யப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளன.
காட்டாக, புதுச்சத்திரத்தை அடுத்துள்ளதொரு கிராமத்தில் ஊருக்குள் புகுந்த மழைநீரிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் சாலையில் குறுக்கே பள்ளங்களை வெட்டிவிட்டனர் . தண்ணீர் வடிந்து பலநாள்களாகியும் வெட்டிவிடப்பட்ட சாலைகள் மறுசீரமைப்பு செய்யப்படாததால் சிதம்பரத்தில் இருந்து புதுச்சத்திரம் செல்லும் நகரப்பேருந்துகள் வேளங்கிப்பட்டு வரையே வந்து திரும்பிச்செல்கின்றனவாம்.
இதனால் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வேளங்கிப்பட்டு, தச்சக்காடு, சேந்திரகிள்ளை, மணிக்கொல்லை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடலூருக்குச் செல்லவேண்டுமானால் பு.முட்லூர் வந்து பேருந்து பிடிக்கவேண்டிய அவலத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
நிஷா ஊருக்கு வந்துட்டுப்போயி ரொம்பநாளு ஆகியூம் கூட, நம்ம அதிகாரிமாறுங்க இன்னும் நித்திரையில்லிருந்து விழிக்கவில்லை என்பதைதான் அந்த "பஸ் போகமுடியாத கிராமங்கள்" எடுத்துக்காட்டுகிறது.
பதிலளிநீக்கு(அட சீக்கிறமா விழிங்கப்பூ,பஸ் வரும் நாழியாகுது)