கடந்த வாரம் வெள்ள நிவாரணத் தொகையாக பரங்கிப்பேட்டையின் சில வார்டு (பேரூராட்சித்தொகுதி) களில் ரூ. 75இலட்சம் வரை வழங்கப்பட்டதாம்।
வெள்ள நிவாரணத் தொகை வழங்குவதில் சில வார்டுகளில் சில வீடுகள் விடுபடுவதாகக் கூறி பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற சாலைமறியலில் சில மன்றஉறுப்பினர்(கவுன்சிலர்)களும் கலந்துகொண்டனர்.
சாலைமறியல் தொடர்பாக கைது நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டது. இதில் கவுன்சிலர் ஒருவருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை யடுத்து பரபரப்பு ஏற்பட்டது. சுமார்117பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
சிதம்பரம் வட்டாட்சியர் தன்வந்த கிருஷ்ணன், செல்வி இராமஜெயம் ச।ம।உ, ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்குவதாக காவல்நிலையத்தை சூழ்ந்துகொண்ட மக்களுக்கு உறுதி அளித்தனர்.
நமது நிருபர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
வெள்ள நிவாரண தொகை விவகாரத்தில் சில வார்டுகளில் வீட்டில் வசிப்பவர்களுக்கே தெரியாமல் "நிவாரணதொகை" வேறு யாரோ (??) வாங்கி சென்றுவிட்டதாகவும்,பேசப்படுகிறது.
பதிலளிநீக்கு"பணம் என்றால் பிணமும் வாயைதிறக்கும்" என்ற முதுமொழி தான் என் ஞாபகத்துக்கு வந்தது.