ஏர் இந்தியா நிறுவனம், The Hindu நாளிதழ், மற்றும் தினமலர் சார்பில் 2008-09ம் கல்வி ஆண்டிற்கு தனித்திறன், தனிப்பட்ட சாதனை படைத்த ஆசிரியர்களை தேர்வு செய்து, "போல்ட் விருது' வழங்கப் பட்டது.
இதற்காக சென்னையில் நடந்த நேர் காணலில் நமதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி தமிழாசிரியை தமிழ்ச்செல்வி நாராயணசாமி கடலூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து "போல்ட் விருது' பெற்றுள்ளார்.
இதே போல் நமதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி இரண்டமிடம் பெற்று "போல்ட் விருது' பெற்றார். இவர்களுக்கு தினமலர் நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி, The Hindu நாளிதழ் ஆசிரியர் ராம், ஏர் இந்தியா நிர்வாகிகள் கையெழுத்திட்ட நினைவு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஞாயிறு, 1 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக