ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

தொலைதூரக் கல்வி மைய விண்ணப்ப விற்பனை நாளை தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் வரும் 2009-10 ஆண்டிற்கான விண்ணப்ப விற்பனை திங்கள்கிழமை (ஏப். 20) காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம். ராமநாதன் பங்கேற்று முதல் விண்ணப்பத்தை வழங்கி விற்பனையை துவக்கி வைக்கிறார்.

பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் முனைவர் எஸ்.பி. நாகேஸ்வரராவ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர். மீனாட்சிசுந்தரம் மற்றும் பல முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக